பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப மாணிக்கம் 171

இளம்பெண் கையைப் பற்றிக் கொண்டு முறுவலிக்கின்றாள் டாக்டர் வ.சுப. மா கையை உதறி சினத்துடன் அவளை நோக்கிக் கடிகின்றார். அவள், நீ ஓர் ஆண்பிள்ளையா?" என்று கொஞ்சும் பாவனையில் கூறிக்கொண்டு எதிர்வரிசை அறைக்கு ஏகிவிடுகின்றாள் - ஆடும் அரவம் பெட்டியில் புகுந்து கொள்வதுபோல்

பெங்களுரில் பெரும்பாலான சிறிதும் பெரிதுமான தங்கும் விடுதிகள் இங்ங்ணம் விபசார விடுதிகளாகச் செயற்பட்டு வருகின்றன என்பதை திருப்பதியில் பணியாற்றும் நான் நன்கு அறிவேன். திருப்பதியில் என் நண்பர்கள் எச்சரித்தனர். என்னை இருப்பூர்தி நிலையத்திற்கு சுமார் அரை கி.மீ. தொலைவிலுள்ள ஆனந்தராவ் வட்டம் (Ananda Rao circle) என்ற இடத்திலிருக்கும் "மாடர்ன் ஒட்டல்" என்ற விடுதியில் தங்கும்படி பரிந்துரைத்தார்கள். அக்காலத்தில் ஒருவர் தங்கும் குளியலறையுடன் கூடியது அறை ஒருநாள் வாடகை ரூ.15/- குளியலறை இல்லாதது ரூ. 10- இது தவிர நான்கு அல்லது ஐந்து படுக்கை உள்ள அறை படுக்கையொன்றுக்கு ரூ. 5 வீதம் தங்கும் வசதியும் இருந்தது. பொதுக் குளியலறையில் வெந்நீர் வசதியுடன் நீராடலாம். பெரும்பாலும், நான் திருப்பதியிலிருந்து முதல்நாள் இரவுக்கு 7 மணிக்கு பெங்களுர் வந்து சேரும் பேருந்தில் வருவேன். மறுநாள்பணியை முடித்துக் கொண்டு இருப்பூர்தியில் காட்டுபாடி வழியாக (வண்டி மாற்ற வேண்டும் அதிகாலை 5 மணிக்கு வந்து சேர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருவரும் ஆனந்தராவ் வட்டத்திற்கு அருகிலுள்ள (சுமார் அரை கி.மீ. தொலைவு மகாராணி மகளிர்க் கல்லூரியில் வழக்கமாக நடைபெறும் பாடத் திட்டக் குழுக் கூட்டத்தில் சந்தித்தோம். உள்ளுர் அரசுக் கல்லூரியிலிருந்த கெம்ப் கைடா சாலையிலுள்ளது ஒருவரும் புனித சூசையப்பர் கல்லூரியிலிருந்து எங்கள் நெருங்கிய நண்பர் தண்.கி. வேங்கடாசலம் என்பாரும்

8 இங்கு மதிய உணவு மட்டும் உண்டு. சிற்றுண்டி இவ்விடுதிக்கு எதிரிலுள்ள கவிதா என்ற தரமான விடுதியில் கிடைப்பதாக இருந்தது.