பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K.N. நல்லப்ப ரெட்டியார் 15

சென்றோம் இராமலிங்கத்திற்கு அப்போது வயது ஏழு; இராமகிருட்டிணனுக்கு வயது மூன்று இந்தச் சமயத்தில் நான் சிறிது நோயால் தாக்குண்டேன். உண்ணும் உணவு அளவில் குறைந்துவிட்டது. இரண்டு நாள் நான் பிறந்து ஏழு வயதுவரை வளர்ந்த ஊரிலுள்ள பல உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்து மகிழ்ந்தேன்.

குறிப்பிட்ட நாளில் நானும் மனைவியுடனும் குழந்தைகளுடனும் பெரகம்பியிலிருந்து மாட்டு வண்டியில் தோப்பை அடைந்தேன். என்னுடன் என் அம்மான், சிற்றப்பாமுறையிலுள்ள நெருங்கின உறவினர் (என் தாயாரைப் பெற்ற பாட்டி பிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள் செட்டிக்குளத்திலிருந்து தியாகராச ரெட்டியார், அவர் தந்தையார் இவர்களும் வந்து சிறப்பித்தார்கள். கோட்டாத்தூரிலிருந்து குதிரை வண்டியில் நல்லப்பரெட்டியாரும் வந்திருந்தார். என்தம்பி கணபதி துணைவியுடன் வந்திருந்தான். இராமலிங்கத்திற்குக் கிராப்புத்தலை: இராமகிருட்டிணனுக்கு தலைவாரி இரட்டை சடைகள் போடப் பெற்று ஆரஞ்சுவண்ண நாடாக்கள் சூட்டியிருந்தோம். இருவருக்கும் தோப்பில் முடி இறக்கப் பெற்றது. இராமகிருட்டிணன் முடிதுறந்த இளவரசல்போல் திகழ்ந்தான். வெந்நீரால் இருவரையும் குளிப்பாட்டினோம். எல்லோரும் மலைக்குச் சென்றோம். குழந்தைகளால் ஏற முடியவில்லை தூக்கிக் கொண்டோம். முருகனை அருச்சனை செய்து வழிபட்டோம். வெள்ளிக்காவடியை முருகன் திருவடியில் வைத்து வணங்கினான் இராமலிங்கம். சுமார் முற்பகல் 11-30க்குக் கீழே இறங்கிவிட்டோம்.

தோப்பில் குமரன் வழிபாட்டுடன் சம ஆராதனை தொடங்கியது. ஏழைகள் உட்பட சுமார் 75 பேர் உண்டனர். உண்ட பின் மேலும் வந்த ஏழைகட்குச் சாம்பார் சாதம் உருண்டை உருண்டையாக வழங்கப்பெற்றது. மாலை நான்கு மணிக்குக் கோட்டாத்துருக்குத் திரும்ப ஏற்பாடு. நான் சிறுவர்களுடன் குதிரை வண்டி புறப்பட்டதால் மாலை ஆறுமணிக்கே கோட்டாத்தூர் வந்தடைந்தேன். மற்றவர்கள் வந்த வண்டி மீதி சோற்றுடன் மாலை