பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K. இராமச்சந்திர அய்யர் 19

வருவதைக் காணலாம் அந்தக் காலத்தில் ஆங்கிலம். தமிழ் ஆகிய பாடங்கட்கு மட்டிலும், அதுவும் பள்ளியிறுதித் தேர்வுகள். இடைநிலைத் தேர்வுகள், இளங்கலைப் பட்டத் தேர்வுகள் - ஆகியவற்றுக்கு மட்டிலும், பாடக்குறிப்பேடுகள் தலைகாட்டின

பயிற்றும் முறையைக் குறித்து நச்சினிர்க்கினயர்,

ஈதல் இயல்பே இயல்புறக் கிளப்பின் பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப் பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன் புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஒரையில் நிகழ்ந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக் கொள்வோன் உணர்வகை அறிந்தவன் கொள்வகை கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்

என்று காட்டும் நூற்பாவினால் அறியலாம்.

ஈதல் இயல்பே இயம்பும் காலைக் காலமும் இடமும் வாலிதின் நோக்கிச் சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளங்கொளக் கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப.

என்பது நன்னூலாசிரியரின் கூற்று.

"ஈதல் இயல்பு" என்பது பண்டையோர் குறிப்பிடும் பயிற்று முறையாகும். "காலமும் இடமும்" என்பதைத்தான் இக்காலத்தார் "தகுந்த சூழ்நிலை" (Proper environment) என்று கூறுவர் "உரைக்கப்படும் பொருள் உள்ளமைத்தல்" என்பது பாட ஆயத்தத்தைக் (Lesson planning) குறிக்கும். "கொள்வோன் கொள்வகை அறிந்து" என்பது ஹெர்பார்ட் என்ற கல்வி வல்லுநர் கூறும் "மனத்தைத் தயாரித்தல்" (Preparation) என்ற படியில்

! நன்னுல் - நூற் 36