பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 37

பார்ப்பன நண்பர்கள் உண்டு - தந்தை பெரியாருக்கு இராஜாஜி உயிரனைய நண்பராக இருந்து போல

நினைவு - 5 : அரங்கசாமி ரெட்டியாரின் இல்வாழ்க்கையை இறைவன் சரியாக அமைக்கவில்லை. செந்தாரப் பட்டியில் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த சத்தியபாமா என்ற மூன்றாவது பெண்ணைத் தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். ஆறு, ஏழு ஆண்டுகள்தாம் இவருடைய இல்வாழ்க்கை சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. தசரதனுக்கு நான்கு குமாரர்கள் தோன்றியதுபோல் இவருக்கும் நான்கு திருக்குமாரர்கள் தோன்றினார்கள். இந்நிலைமையில் சிறுவர்களையும், கணவனையும் விட்டு துணைவியார் திருநாடு அடைந்தார்கள். இவர்கள் மாணாக்கர்கள் விடுதிகளில் தங்கியே தங்கள் கல்வியை முடித்துக் கொண்டனர். இவருடைய அன்னையார் மட்டிலும் துறையூர் இல்லத்தில் தனியாக இருந்து வந்தார்கள். மாமியார் திருச்சி தில்லைநகர் இல்லத்தில் இருந்து வந்தார்கள். விடுமுறை நாட்களில் பேரப் பிள்ளைகள் நால்வரும் திருச்சியில் பாட்டியாருடன் சேர்ந்து கொள்வார்கள். எல்லோருமே பட்டப் படிப்பை முடித்துக் கொண்டவர்கள். மூவர் சட்டப் படிப்பையும் முடித்தனர். மூத்தவர் R. இராசாராம பேருந்துக் கம்பெனியைக் கவனித்து வருகின்றார். இரண்டாமவர் R. இராமராஜ் பி.ஏ., பி.எல். திருச்சியில் அரசு வக்கீலாக இருந்தபோது தந்தையார் வாழ்ந்த காலத்திலேயே திருநாட்டை அலங்கரித்து விட்டார். இவரது அருமைச் செல்விக்குத் திருச்சியில் நடந்த திருமணத்திற்கு 1992) அடியேன் சென்று வாழ்த்தி வந்தேன் மூன்றாமவர் R. தர்மராஜ் அமெரிக்காவில் ஒரு பெரிய பதவியில் உள்ளார். நான்காமவர் R. சுந்தரராஜ் எம்.ஏ. ஆங்கிலத்தில் முதுகலையில் தேர்ந்தவர். இவர் I.P.S தேர்வில் வெற்றுபெற்று நேர்மையான கடுமையான உழைப்பினால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்சமயம் தில்லியில் தகவல் அளிப்பு sessiélélé (intelligence Bureau) இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். அமெரிக்காவில் இருப்பவரைத் தவிர ஏனைய இருவரிடமும் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகின்றது.