பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நீத்தார் வழிபாடு

(2)

இறைவன் ஒருவனே; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்; எவ்வளவு கற்ருலும் கேட்டாலும் அவனது உண்மை நிலையை அறிந்து கூறமுடியாது; அவன் மன்பதைகளுக்கு வரும்துன்பத் தைக் காத்துஅருள் வான்; அவன் ஒளி வடிவம் ஆனவன்; அவன் அம்பலத்தில் ஆடுகிருன்; அதல்ைதான் எல்லா உயிர்களும் இயங்குகின்றன. அவன் அன்றி ஓரணுவும் அசையாது; அவனே அல்லும் பகலும் அனவரதமும் துதித்தல் வேண்டும்.

உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் ulakelaam unnarnthu õtharku ariyavan நிலவுலாவிய நீர்மலி வேனியன் nilavulaaviya neermali vēnniyan அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் alagil Sõthiyan ambalaththu aaduwaan மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

malarsilambadi vaazhththi vanna nguvaam

உலகத்து உயிர்கள் எல்லாமும். பொறிகளாலும் புலன் களாலும் உணர்ந்து, இத்தகையவன் என்று சொல்லுவதற்கு முடி யாதவன்;

சந்திரன் பொருந்தியதும், கங்கை தங்கியிருப்பதும் ஆன சடையை உடையவன்;

அளவிட முடியாத சோதி உடையவன்;

சிற்றம்பலத்தில் நடனம் செய்பவன்;

அவனுடைய மலர் போன்றதும் சிலம்பு அணிந்ததும் ஆன திருவடிகளை வாழ்த்துவோம்; வணங்குவோம்.

He is unperceivable through the five senses and his rareness connot be expounded even by greatmen.

He has matted locks where the crescent moon moves about and the Ganges abounds;

He is abundant effulgent light;

He dances at the Hall of Wisdom!

His flower like Feet adorned with anklets, we shall praise and worship.