இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
116
1 16 பட்டுவிடப் போகிறது; உடனே திருஷ்டி கழிக்க வேண்டும். சமையல் கட்டிலே இருக்கிற பூசணிக் காயைக் கொண்டு வா’ என்ருள். பூசணிக் காயில் சூடத்தை ஏற்றி வைத்துக் குழந்தைகளை மூன்று முறை சுற்றிவந்து, வாசலில் கொண்டு போய் உடைத்தாள். பிறகு, 'மாலா! நீலா !” என்று இருவரையும் அருகிலே அழைத்தாள் பார்வதி அம்மாள். இரு வரையும் கட்டிப் பிடித்துக்கொண்டு பாசத்துடன் மாறி மாறிப் பார்த்தாள். அப்போது அவளது கண்களிலிருந்து அருவி போல் நீர் வழிந்தது. "ஏன் பாட்டி, அழுகிருய்?’ என்று கவலை யோடு கேட்டாள் மாலா.