பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


இரண்டு பெரிய பெண்களும், தன்னந் தனியாக அந்தக் குடிசையில் ஆடம்பரமின்றி வாழ்ந்து வர நேரிட்டதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்கள். இப்போது அரண்மனைக்குப் போகப் போகிறோம் என்ற வுடன் மிகவும் ஆனந்தமடைந்தார்கள். சந்திரிகாவும் ஆனந்தப்படுவதாகக் காட்டிக் கொண்டாள்.

அந்த மூன்று பெண்களும் மறுநாள் காலையில் தங்கள் சிற்றன்னையுடன் புறப்பட்டார்கள். அவர்களில் எல்லோருக்கும் பின்னால் கடைசியாகச் சென்றவள் சந்திரிகாதான். அவள் நூல் கண்டிலிருந்த நூலின் ஒரு ಶ್ಗ வீட்டுக் கதவில் க்ட்டிவிட்டு, வழி நெடுகிலும் நூலை விட்டுக்கொண்டே போனாள்! வெகு துாரம் காட்டுக்குள் சென்ற பின், அகங்காரவல்லபி இவ்வளவு தூரத்திலிருந்து தன் பெண்கள் திரும்பி வரமுடியாதென்று நினைத்தாள். ஆகவே, அவள் அவர்களைச் சிறிது நேரம் உறங்கிக் களைப்பாறச் சொன்னாள். அவர்களும் நடந்து வந்த அலுப்பால் நன்றாகத் துTங்கிவிட்டார்கள். ஆனால் சந்திரிகா மட்டும் துTங்கவில்லை; தூங்குவதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். அகங்கார வல்லபி அவர்களை நடுக்காட்டில் அனாதரவாக விட்டுவிட்டு ஒசைப்படாமல் நழுவி தன் வீட்டிற்குத் திரும்பிவிட்டாள்.

பிறகு சந்திரிகா தன் அக்காள்மார்களை எழுப்பி, எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னாள். அவர்கள் அதைக் கேட்டு அழ ஆரம்பித்தார்கள். தங்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் சென்றால் அவளுக்குத் தங்கள் பொம்மைகளையும் விளையாட்டுச் சாமான்களையும் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அவர்கள் சொன்னபடி நடக்கமாட்டார்கள் என்று தெரிந்திருந்தும், சந்திரிகா அன்புள்ளம் கொண்டவள் ஆகையால் அவர்களையும் அழைத்துக் கொண்டு திரும்பினாள். நூல் வந்த பாதையைப் பார்த்துக் கொண்டே அவர்கள் தங்கள் தந்தையும் சிற்றன்னையும் இருந்த குடிசைக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்கள்.