பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29



"பாவிப் பெண்களே! இது இராட்சதனுடைய கோட்டை என்பது உங்களுக்குத் தெரியாதா? அவனுக்கு ஒருவேளை பசியடங்குவதற்கு நீங்கள் மூன்று பேரும் சேர்ந்தாலுங்கூட போதாதே! ஆனால் என் கணவனைவிட நான் நல்லவள். உங்கள் மூன்று பேரையும் ஒரே தடவையில் தின்று விடமாட்டேன். ஆகவே நீங்கள் இன்னும் மூன்று நான்கு நாட்களுக்கு உயிரோடு இருக்கலாம்” என்று அந்த ஒற்றைக்கண் இராட்சசி கூறினாள்.

அதைக் கேட்ட இளவரசிகள் அங்கிருந்து ஒடலானார்கள். ஆனால் இராட்சசியின் கைகள் அவர்களுடையதைப் போல ஐம்பது மடங்கு நீளமாக இருந்தபடியால், அப்படியே மூன்று பெண்களையும் வளைத்துப் பிடித்து மூவரையும் ஒரு நிலவறைக்குக் கொண்டு சென்றாள். பசுமையான சந்திரிகாவை அப்போதே கிரை பொறித்துச் சாப்பிடுவதுபோல் சாப்பிட்டு விட வேண்டுமென்று அந்த அரக்கிக்குத் தோன்றியது. அதற்காக எண்ணெய் எடுத்து வரப்போனாள். அப்போது இராட்சதன் வருகிற சப்தம் கேட்டது. மூன்று பெண்களையும் அவனுக்குத் தெரியாமல் தானே சாப்பிட எண்ணிய இராட்சசி அவர்களை ஒரு தொட்டியில் போட்டு மூடிவைத்தாள். அந்தத் தொட்டியின் பக்கவாட்டில் இருந்த துவாரத்தின் வழியாகப் பார்த்த போது அந்த இராட்சசியைப் போல் ஆறு மடங்கு உயரமுள்ள ஒரு பெரிய இராட்சதனை மூன்று பெண்களும் கண்டார்கள். அவனுடைய பேச்சுக்குரலின் ஒசையில் அந்த மாளிகை ழுவதும் அதிர்ந்தது. அவனுக்கும் நெற்றியின் நடுவில் ஒரே ஒரு பெரிய கண்தான் இருந்தது. அவன் ஒரு நீண்ட தடிக் கம்பை ஊன்று கோலாகப் பிடித்திருந்தான். காற்றை மூக்கினால் இழுத்துப் பார்த்த அந்த இராட்சதன் தன் மனைவி தனக்குத் தெரியாமல் சில குழந்தைகளை மறைத்து வைத்திருப்பதைக் குறிப்பிட்டுக் கோபித்துக் கொண்டான்.