பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30


“இங்கே குழந்தைகள் யாரும் இல்லை! இரண்டொரு வினாடிகளுக்கு முன் நான் உரித்துத் தின்ற ஒரு மந்தை ஆடுகளின் கரிவாசம்தான் வீசுகிறது” என்றாள் அவன் மனைவியான இராட்சசி.

ஆனால், அவள் சில குழந்தைகளை ஒளித்து வைத்திருக்கிறாள் என்று இராட்சதன் நிச்சயமாகத் தெரிந்து கொண்டான். அதைத் தெரிந்து கொண்ட இராட்சசி பயந்து போய்க் கடைசியில் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாள். ஆனால், “இந்தப் பெண்களை நாம் வீட்டு வேலை பார்ப்பதற்கு வைத்துக் கொள்ளலாம். அவர்கள் நமக்குச் சமைத்துப் போடவும் குற்றேவல் வேலை செய்யவும் பயன்படுவார்கள். அவர்களைச் சாப்பிடவேண்டாம்” என்று வேண்டிக் கொண்டாள்.

சிறிது நேரம் இராட்சதனும் இராட்சசியும் சண்டை போட்டுப் பேசிக் கொண்டார்கள். முதலில் இராட்சதன் மூன்று பெண்களையும் உடனே சாப்பிட்டுவிட வேண்டும் என்றான். பிறகு இரண்டு பேராவது வேண்டும் என்றான். பிறகு ஒரே ஒரு பெண்ணையாவது தின்று சுவைக்க வேண்டும் என்றான். ஆனால் அவன் மனைவி பேசிப் பேசிக் கடைசியாக ஒருவரையும் சாப்பிடாமல் இருக்கும்படி ஒப்புக் கொள்ள வைத்தாள்.

அதன் பிறகு அப் பெண்களைப் பார்க்க வேண்டும் என்று இராட்சதன் சொன்னான். பெண்கள் மூவரும் தொட்டியைவிட்டு வெளியில் நகர்ந்து வந்து அவன் எதிரில் நடுநடுங்கிக் கொண்டே நின்றார்கள். அவர்களுக்குச் சமைக்கவும், வீட்டைச் "சுத்தமாக வைத்துக் கொள்ளவும் தெரியுமா என்று இராட்சதன் கேட்டான். அவர்கள் எல்லா வேலைகளும் செய்யத் தெரியும் என்றும் பிரமாதமாகச் சமைக்கத் தெரியும் என்றும் கூறினார்கள். உடனே சமைக்கும்படி சந்திரிகாவிடம் இராட்சதன் சொல்லிவிட்டு சட்டி காய்ந்து விட்டது என்பதை அவள் எப்படி தெரிந்து கொள்ளுவாள் என்று கேட்டான்.