பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

திரும்பி அதை ஒழுங்காகவும் சிறப்பாகவும் குடிமக்கள் மகிழ்ச்சியடையும் படியாகவும், பகைவர்கள் அதிர்ச்சியடையும் படியாகவும் ஆண்டு வரத் தொடங்கினார்கள். இளவரசி சந்திரிகா இளவரசன் சுந்தராங்கதனுடன் இன்பமாக இல்லறம் நடத்தினாள். அவளுடைய சகோதரிகளுக்கும் தகுந்த இளவரசர்களைப் பார்த்து அவர்களுடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். எல்லோரும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள்.



கதை : மூன்று


கறுப்புச் சட்டைக்காரன்

நெடுங்காலத்திற்கு முன்னால் கடார தேசத்தில் ஒர் அரசன் இருந்தான். அவன் தன் மேலங்கியின் மீது ஏழு தங்க பசுக்களை அணிந்திருந்ததால் ஏழு தங்கப் பசு மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்தான்.

அவன் பெருஞ் செல்வந்தனாகவும், கடார தேசத்து அரசர்களிலேயே பெருங் கொடை வள்ளலாகவும் விளங்கினான். ஒவ்வொரு நாள்