பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

நான் இங்கே வந்தேன். இப்போது உங்கள் வேலைக்காரரிடம் அதைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன்!” என்று சொன்னாள்.

"தங்கம் அளக்கப் படி வேண்டுமா? உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று கேட்டாள் அரக்கி.

“எனக்கொன்றும் பைத்தியமில்லையம்மா! உண்மையைத் தான் சொல்கிறேன்” என்றாள் ஆவுடையாள்.

"மூடமே உளறாதே" என்று கூறினள் அரக்கி. அவளால் நம்பமுடியவில்லை.

அரக்கி, "இருக்காது" என்று கூற ஆவுடையாள், "உண்மைதான்" என்று கூற இப்படியாகப் பெண்கள் மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் போட்ட கூச்சலில் சரியாகத் துரங்கமுடியாத அரக்கன் பெருந்தலைப் பிரசண்டன் கோபத்தோடு உறுமிக் கொண்டே அங்கு எழுந்து வந்தான் . தோட்டக்காரன் மனைவியைக் கண்டவுடனே அவன் கடுமையான குரலில், “நீ தானா? சரி. உன் கனவனிடம் சொல்லி விடு. நாளைக்கு அவன் ஒழுங்காக வாடகைப் பணத்தை எண்ணிக் கொடுக்காவிட்டால் நான் சும்மா விடப்போவதில்லை.” என்று கண்டிப்பாகக் கூறினான்.

. ஆவுடையாள் அவன் முன்னால் மரியாதையாகத் தலை வணங்கி நின்று, 'ஐயா, பெருந்தலைப் பிரசண்டப் பெருமானே! தங்களுக்குரிய வாடகைப் பாக்கியைத் தவறாமல் கொடுத்துவிட்த் தான் என் கணவர் விரும்புகிறார். வேண்டுமானால் நீங்கள் இன்றே கூட வந்து வாங்கிக் கொள்ளலாம். அவருக்கு இப்போது கொஞ்சம் அதிர்ஷ்டம் வந்திருக்கிறது. எல்லாம் உங்கள் தயவால்தான். நீங்கள் மாட்டைக்-