பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69



"இப்போது நீ சரியாக நாடகம் ஆட வேண்டும்!” என்று அவளை எச்சரித்து வைத்தான் சமயோசிதம். ஆவுடையாளும் சரி என்றாள்.

கோபமாக உறுமித் திட்டிக் கொண்டே அரக்கன் தோட்டத்திற்குள் நுழைந்தவுடனேயே, வீட்டிற்குள் தோட்டக்காரனும் அவன் மனைவியும் ஒருவரை யொருவர் வைது கொள்ள ஆரம்பித்தார்கள். "துப்புக் கெட்ட்வளே! சீர்கெட்டவளே! துடைப்பக்கட்டையே!” என்று திட்டினான் சமயோசிதம்.

'குடிகாரனே! அறிவு கெட்டவனே! உபயோகமற்றவனே!” என்று வசைபாடினாள் அவன் மனைவி. அதோடு நில்லாமல் ஒரு மரக்கம்பை எடுத்துக் கொண்டு அவனை அடிக்கப் போனாள் மனைவி. -

அரக்கனுடைய கூப்பாட்டையும் அடக்கும்படியான கூச்சல் போட்டு கணவன் மனைவி இருவரும் சச்சரவிட்டுக் கொண்டிருந்தார்கள். கோபமாக வந்த அரக்கன், என்றும் அடித்துக் கொள்ளாத தம்பதிகள் அன்று அப்படி ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கதவோரமாக நின்று கொண்டே கவனித்தான். திடீரென்று சமயோசிதம் ஒரு பெரிய கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு தன் மனைவியின் நெஞ்சிலே குத்தினான். அந்தக் கத்தி நெஞ்சுக்கு நேரேயிருந்த பசு மாட்டு இரத்தம் அடங்கிய குடல் பையைக் குத்திக் கிழித்ததால், இரத்தம் பீறிட்டுக் கொண்டு விழிந்தது. தோட்டக்காரன் மனைவி பயங்கரமாக அலறிக்கொண்டு செத்தவள் போல் கீழே விழுந்து விட்டாள். பிறகு அவள் உடல் அசையவேயில்லை. பேச்சு மூச்சில்லாமல் பிணம்போல் கிடந்தாள்.

"பாவி! கொலைகாரா! முதலில் உன்னுடைய தந்திரத்தால் நான் அருமையாக வளர்த்த