பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75



வியாபாரி சாக்கு மூட்டையின் மேல் தன் காலால் எட்டி உதைத்தான். "இந்தக் கழுதைகளைச் சந்தைக்கு ஓட்டிக் கொண்டு போய் எவ்வளவோ வியாபாரம் செய்ய வேண்டியிருக்கிறது. வழியில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டுக் கிடப்பவர்களை யெல்லாம் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. வேறு யாரையாவது பார்த்துக் கொள்!" என்று சொல்லி தன் சவுக்கை ஓங்கி வீசிக் கொண்டு "ஹை, ஹை" என்று தன் கழுதைகளைச் செலுத்தத் தொடங்கினான்.

"நில்! நில்! போய்விடாதே நீ எனக்கு உதவி செய்யத்தான் வேண்டும். நானும் உன்னைப்போல் ஒரு வியாபாரிதான். ஒரு பெரிய பணக்காரன் என்னைத் தன் மாளிகைக்குத் தூக்கிக் கொண்டு போகிறான். அவனுடைய மகள் ஒரு வியாபாரியைத் தான் திருமணம் செய்து கொள்வேனென்று பிடிவாதம் செய்கிறாளாம். திருமணம் இன்றைக்கே நடக்கப் போகிறது. திருமணம் முடிந்ததும் தன் மகளுக்கு சீதனமாக பண்க்காரன் பாதிச் சொத்தை எழுதி வைக்கப் போகிறான். ஆனால் எனக்கென்னவோ பணக்காரனாக வாழ்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதோடு எனக்கு நல்ல மனைவி ஒருத்தியும் இருக்கிறாள்!" என்றான் சமயோசிதம்.

"இருந்தால் என்ன? உன்னைப் போன்ற நிலையில் நான் இருந்தால் இப்படி முட்டாள்தனமாக மறுக்கமாட்டேன்” என்று சொன்னான் வியாபாரி.

"அப்படியானால் நண்பனே, எனக்குப் பதிலாக நீ போகலாமே? போவது யாராக இருந்தாலும், அது ஒரு வியாபாரியாக இருந்தால் போதும் அந்தப் பெண்ணுக்கு!" என்றான் சாக்கு மூட்டைக்குள்ளிருந்த சமயோசிதம்.

வியாபாரி சிறிது நேரம் யோசித்தான். சமயோசிதமோ அதே சமயம் இந்த விவகாரம்