பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

முடிவதற்குள் உள்ளே போன அரக்கன் திரும்பி வந்து விடக் கூடாதே என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.

சாக்கு மூட்டையை முடிந்து கட்டியிருந்த கயிற்றை வியாபாரி அவிழ்த்து விட்டான். சமயோசிதம் வெளியே வந்ததும் சாக்குக்குள்ளே வியாபாரி நுழைந்து கொண்டு, "இதோ பார்! என் கழுதைகளை இங்கேயே பக்கத்தில் ஒரு மரத்தடியில் நிறுத்தி வைத்து என் சரக்குகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள். நான் போய் அந்தப் பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சீதனப் பணத்திற்கும் நிச்சயமான ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன். இங்கே நீ என் சரக்குகளை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டால் திரும்பி வந்ததும் உனக்கு மொந்தைக் கள் வாங்கித் தருகிறேன்" என்றான்.

"உன் சரக்குகளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். அதைப்பற்றிச் சிறிதும் பயப்பட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அந்த வியாபாரியைச் சாக்கு மூட்டைக்குள்ளே வைத்து நன்றாக இறுக்கிக் கட்டிவிட்டான் சமயோசிதம். பிறகு அவன் சவுக்கை எடுத்துக் கொண்டு கழுதைகளை வெகு வேகமாக அடித்து விரட்டிக் கொண்டு புறப்பட்டான். அவன் சாலை முனையில் திரும்பிய சமயத்தில் உள்ளே கள்ளுக்குடிக்கப் போன அரக்கனும், வேலைக்காரனும் திரும்பி வந்தார்கள். சாக்கு மூட்டையைத் துக்கிக் கொண்டுபோய் ஆற்றிலே போட்டார்கள்.

அரக்கன் மிகுந்த ஆனந்தத்தோடு, “அந்தப் புரட்டுக்காரப் பயல் ஒழிந்தான்! இப்போதுதான் எனக்கு மன அமைதி ஏற்பட்டது. சரி வா! திரும்புவோம்” என்று சொன்னான். ஆனால் சம்பந்தமில்லாத யாரோ ஒரு வியாபாரி உயிரை இழந்தான் என்ற விஷயம் அவனுக்குத் தெரியாது!