பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

82

"நான் ஒரு வேட்டைக்காரனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கனவு கண்டேன்” என்றாள் இரண்டாவது பெண். ՝

ஆனால் கடைசிப் பெண்ணான கோமளா ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

'தங்கையே; நேற்றிரவு, நீ என்ன கனவு கண்டாய்?" என்று அக்காமார் இருவரும் அவளைக் கேட்டார்கள்.

"என்னை அழகான ஒர் அரசர் மணம் புரிந்து கொண்டதாகக் கனவு கண்டேன். நான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகவும், அக்குழந்தைகளில் ஒன்று இளவரசனாகவும் மற்றொன்று இளவரசியாகவும் இருப்பதாகக் கனவு கண்டேன். என் இரண்டு குழந்தைகளும் இரண்டு பூக்களைப் போல் அவ்வளவு அழகாக இருந்தன!” என்றாள் கோமளா.

இவ்வாசகங்களை மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மன்னன் தேவப்பிரியன் உடனே அம்-