94
நூறாசிரியம்
காதன் மயக்கத்தால் அவன் தன்னை ஏமாற்றும் நோக்கொடு வண்ணித்த புகழுரைகளைக் கேட்டுக் கூசாது நின்று அவன் வழிப்பட்டது.
-“என்றிந் நான்கு பிழைகளுக்கும் தானே கரணியமாகி நின்று, தன் பொற்பழிந்த பின்றை இக்கால் கிடந்து வருந்துதலால் பயன் என்னை, நகைப்பிற்கிடமானது இவ்வருத்தம்” என்று தோழி, தலைவியின் அறியமையைக் கடிந்தாள் என்க. இம் மொழிகளைத் தனித்து வருந்தும் அவள் மட்டும் கேட்குமாறு உரைத்தல் சால்பில்லை என வுணர்ந்த தோழி, தலைவன் வந்து புறத்தே நிற்றலை அறிந்து அவனும் கேட்குமாறு உரைத்தாள் என்க.
மழையினும் இருளினும் மருளா: மழைக்கும் இருளுக்கும் அஞ்சாது, அற்றைத் தன்னை நனைக்கும் மழை நீருக்கும், வெளிப்பட அருமையாய இருளுக்கும் அஞ்சாதாயினை. இற்றை ஊரார் உரைக்கும் பழிச் சொல்லாகிய மழைக்கும் வெளிப்பட அருமையாகிய இருள் போன்ற காவலுக்கும் அஞ்சுதல் ஆயினை எனும் கருத்துப்பட மொழிந்தாள் என்க.
'ஊரலர்.....ஒழித்து: ஊர் கூறும் பழமொழிகளை அன்று நீ ஒழித்தாய்; இன்று உன் செயல் உன்னையே ஒழிக்கலாயிற்று என்னும் குறிப்புத் தோன்ற வுரைத்தாள்.
புணர்ச்சி வேண்டி :கூடுதல் விரும்பி.
குறியிடம் கூடுதல்: பொருட்டுத் தலைவனால் குறிக்கப்பெற்ற இடம்.
அச்சம் தவிர்த்தல்: பழிக்கும், தவறான ஒழுக்கத்திற்கும் வேண்டுவதாகிய அச்சம் தவிர்க்க வேண்டாத ஒன்றைத் தவிர்த்தாய்; இக்கால் அது நின்பால் தவிர்க்க வேண்டாதாக வந்து பற்றியது என்றாள் என்க. அச்சம்-அஞ்சுவ தஞ்சும் அறிவுடைமை.
இளமை மடவோர்: இளமைப் பருவத்து இயல்பாகிய பேதைமை நிரம்பியோர்.
ஏமம் வேண்டி: காவல் வேண்டி.
கொளுத்திய: அறிவுறுத்திய.
கொள்கை: கைக்கொள்ள வேண்டிய கோட்பாடு.
'களவின் மாறி: களவுக் காலத்தே கைவிட்டு.
நயப்பு: காதலிப்பு, விழைபாடு, விருப்பம்.
மடமை வீழ்த்தல்: பெண்களுக்கு இயல்பாய தாகிய மடப்பத்தைக் கைவிடுதல், மடப்பம் கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாமை யெனும் அரும்பண்பு.
“அன்று நீ கொள்ள வேண்டிய மடப்பத்தைக் கொள்ளாது வீழ்த்தினை இன்று அது நின்னை வீழ்த்திற்று காண்” என்றவாறு,