பக்கம்:நூறாசிரியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

நூறாசிரியம்


கவலறு கட்டுரை : கவலையைப் போக்குகின்ற நெடிய உரை. கட்டி உரைக்கப்படுவதால் கட்டுரை. கட்டியுரைத்தல்-மேன் மேல் தொடர்பு படக்கோத்து உரைத்தல்,

கடிதின் தந்து விரைந்து தந்து

துன்ப மேலீட்டால் கவலுற்றகாலை அத் துன்பம் போக்கும் உறுதியுரைகளை விரைந்து தந்து,

நிலையின் நீங்கி - தம் நிலையினின்று நீங்கி,

நிறைகெட நெகிழ்க்கும் தம் நிறைநிலை கெடுமாறு இடையூழ்த்தும் உறுதிபயப்பதாஞ்சொற்களை விரைந்து தந்தவர். தம் பெருமை கெடுமாறு அவற்றைப் புறத்தே போய்க் கைதளர்க்கும்.

விலைமாறு வினைகொள் வீனர் ஒதை-நம் துன்பத்திற் கேதுவாயவற்றைக் களைய விரும்பிய செயல்களைத் தம் இன்பத்திற்கென விலைபோக்குகின்ற புல்லிய வினையை உடைய வீணர்களின் ஆரவாரம். கூறிய உறுதிமொழிகளும் அவற்றிற்குரிய காலமும் அவற்றின் மேல் கொண்ட நம்பிக்கைகளும் வீண் என்று கருதுமாறு செய்ததால் வீணர் எனப்பட்டனர். அவ்வுறுதிமொழிகளும், அவற்றின் மேற்கொண்ட நம்பிக்கையும் பயனின்றிப் போனமையால் அவை வெறும் ஆரவார மென்று கொள்ளப்பட்டன.

ஒதை ஒசை ஆரவாரமிக்க பொருளில் வெற்றொலிகள்.

முந்நீர்உலகம் - கடலால் சூழப்பெற்ற உலகம். முந்நீர்கடல் ஊற்று நீரும், ஆற்று நீரும், மழை நீரும் சேர்ந்த தொகுதியாகையால் முந்நீர் என்பது கடலைக் குறித்தது.

மூண்டுயிர் மேவலால்-மூளுதலுற்ற உயிர் உடம்போடு மேவி இருத்தலால் உயிர் உடம்பொடு பொருந்தி இருத்தல் பற்றியே மாந்தப் பிறவி என்று திரிதரலால் மாந்தப்பிறவி பிற உயிர்ப் பிறவிபோல் அன்றி, உட்பகையற்று வாழவேண்டிய தொன்றாக விருந்தும், அப் பிறவியெடுத்தும் பிற விலங்குகள் போலும் சிற்றுயிரினங்கள் போலும் உட்பகை கொண்டு வாழ்கின்ற தன்மையினர் சிலர் என்பது.

உட்பகை நொதியும் உளத்தோர் - உட்பகை என்னும் நீரில் ஊறிக்கிடக்கின்ற உளத்தை உடையவர்.

உட்பகை கொண்டவர் மேலும் பொறாமை கொண்டவராகிப் பகை வலுக்கவே இருப்பாராகலின் பகைநொதிகின்ற உள்ளம் உடையவர் எனக் கூறப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/128&oldid=1220732" இலிருந்து மீள்விக்கப்பட்டது