பக்கம்:நூறாசிரியம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

நூறாசிரியம்


பால்வாய் பாலுண்ட வாய் இளமென் வாய்.

பனிமுகம் நீந்தி பால் வாயை மோந்த தாய் குழந்தையின் குளிர்ந்த முகத்தில் தன் முகத்தை வைத்து ஒட்டி உரசுதல் நீரில் உடம்பு உரசி அளாவுதல்போல் குழவியின் மென்மையான முகத்தொடு தாய்முகம் அளாவுதலால் முகம் நீந்துதல் என ஒருபுடை உருவகமாகக் கூறப்பெற்றது.

மாலுற மயக்கமுற

குழைவுடல் சந்தனச் சாந்துபோலும் வண்ணமும் மென்மையும் குளிர்ச்சியும் தோய்ந்த உடல்,

அனைந்தகங் குளிர்ந்து குழந்தையோடு தாய்போய் அதன் உடல் நலுங்காது பொருந்துதலால் அனைத்து என்னாது அணைந்து எனலாயிற்று. அணைந்து அகங்குளிர்ந்தாள் என்றபடி

புன்றலை அளைந்து இளமையும் மென்மையும் சான்ற தலையின் முடி நலுங்கலுறாது நீரான் அளைந்து.

பொன்னுடற் கழுவி பொன்னிறம் போன்ற உடலைக் கழுவி யெடுத்து.

தென்றல் சிதர்போகும் இளமயிர் ஆர்த்தி : தென்றல் சிதர்ந்து புகுமளவில் மென்மை சான்ற தலைமுடியைக் காற்றிலும் இளவெளிலிலும் ஆர்த்தல் செய்து ஆர்த்தல்-ஒளிபெறச் செய்தல், ஈராமாயிருந்த முடி உலர்ந்தபின் ஒளிபெறுமாறு செய்தல்.

கதைபல குழைந்து காகஞ் சுட்டி குழவி, கதைகேட்கும் அறிவு பெற்றிலதேனும் தாய்க்கிருக்கும் உணர்த்துதல் உணர்வால் தானறிந்த கதைகளை அதன்பால் குழைந்துகூறி, குழைந்து கூறுதல் என்பது மழலையிற் சொல்லுதல். சொற்குழைதல் மழலை. காகஞ் சுட்டுதல்-குழந்தைக்கு “அதுகாண் குருவி; இதுகாண் கிளி; உது. காண் காகம்"என வேடிக்கைக் காட்டி அமைவுறச் செய்யுமொரு விரகு, குழந்தை அமைவுறுங்காலன்றித் தாய் அதற்கு இதழுடை மாட்டலும் மணிக்கண் எழுதலும் போலப் புனைவு செய்தல் இயலாது. ஆகையால் கதை குழைந்து காகஞ் சுட்டினாள் என்க.

இதழுடை மாட்டி மலரிதழ்ப் போலும் மென்மையான உடையைக் குழந்தையின் உடல் நலுங்காது அணிவித்து, உடுத்தி என்னாது மாட்டி என்றது உடல் நலுக்கமுறாது அணிவித்ததை என்க.

மணிக்கண் எழுதி மணியைப் போலும் ஒளி பொருந்திய கண்களில் மையெழுதி.பொதுப்படத் தீட்டாது அழகுபட எழுதி என்றது கருதத்தக்கது.

உள்ளர்ந் தெழுஉம் உவகை பொலிய உள்ளத்தினின்று புடையளாவி எழுதரும் மகிழ்வு முகத்திலே மலர்ந்து விளங்கும்படி

கள்ளாளிதழ்கள் கனிய முத்தி : கள் ஊறுகின்ற இதழ்கள் கன்றிச் சிவக்கும்படி முத்தத் தந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/136&oldid=1220759" இலிருந்து மீள்விக்கப்பட்டது