பக்கம்:நூறாசிரியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

நூறாசிரியம்


கார்த்தோ - கார்ப்பு உடையதோ,

கரும்புகை --- ஒழுக - கரிய புகை சூழ்ந்து கருத்துள்ள சுவர் முருடுகளில் மழை நீர் ஒழுகியிருக்க

சுவர்களும் தரையும் ஒழுங்கற்று முருடு முருடாக இருக்கின்றன. அம்முருடுகள் கரிய புகைகள் சூழ்தலால் கருமையேறியிருக்கின்றன. அவற்றின்மேல் மழை நீர் ஒழுகி அக்கருமையை நனைத்து மேலும் கருமையுடையதாகத் தோன்றுகின்றது. இந்நிலையில் இருள்வேறு தன் படையுடன் வந்து அக்குடிலுட் புகுந்துள்ளதென்க.

இருட்படை புகுந்த நம் இல்வினும் மைத்தோ-'இருள் தன் படையுடன் குடி புகுந்த நம் இல்லத்தைவிட, நமக்கு வந்து வாய்க்கும் சாவு இருண்மை உடையதோ? என்றான் என்க.

புகையால் கருமை நிறமேறிய சுவர்களில் ஒளி பாய்ந்தாலும் ஒளிர வழியில்லை. சுவர் முருடுகளின்றி யிருந்தாலோ ஒருவாறு ஒளி பாய வழியுண்டு. அதுவோ மேடும் பள்ளமுமாய் முருடுகள் நிறைந்துள்ளது. எனவே இருள் தவிர ஒளி சூழ்வதற்கு வழியே இல்லை என்க.

பனங்கணிப்பறட்டைப் பையல் - பனம்பழத்தினைச் சூப்பியெறிந்தது போல் பிசுக்கும், வெளுப்பும், பறக்கையுமுடைய தலையைக் கொண்ட பையன்.

சிணுங்குதல் - மெலிதாக ஆனால் தொடர்ந்து அரற்றி யழுதல்.

நனைவிழி கலுழும் மனை - நனைந்துள்ள விழிகளினின்று ஒழுகுகின்ற கண்ணிரையுடைய மனைவியே!

நின்மேனி . பாழ்த்தோ - நின்னுடைய மேனியின் வறட்சியையும் சீர்கேட்டையும் விடக் கொடியதோ.

மறவி - உடலினின்று உயிரைப் பிரிப்பதாக கருதப்பெறும் காலன்.

'மறல் - கொடுமை, மறலி - கொடியவன்.

காலம் - உடலினின்று உயிர் பிரியும் நேரம் காலன் - அந்நேரத்திற்குரியதாக கருதப்பெறும் ஓர் உருவகத் தோற்றம்

காலம் செய்யும் கொடுமை: அவன் பேச்சு என்னைக் கொன்றது அவள் நினைவு என்னைத் தடுத்தது என்னும் தொடர்களில் காலம், பேச்சு, நினைவு ஆகிய அஃறிணைப் பெயர்கள் உயர்திணை பெயர்கள் போல் உருவகிக்கப்படுவதைப் போன்றது இறப்பு. எனவே அவ்வினைக்குரியவனாக ஒருவன் கற்பிக்கப் பெற்றான்.

குறிக்கை - குறி கொண்ட கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/167&oldid=1221022" இலிருந்து மீள்விக்கப்பட்டது