பக்கம்:நூறாசிரியம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

169


மடி நனிவறல- முலைகள் எழுச்சியின்றி நன்றாக வற்றிப் போகும்படியும். இளமைக்கே அழகுதரும் மார்பகம் நிமிர்தலின்றி தாழ்ந்து தொய்ந்து போகும்படியும்.

அறலென அடிவயிறு மடிய மணல் அலைகள் போலும் அடி வயிறு மடிதலுறும் படியும்.

திறல் அற- உடல் திறன் குன்றுமாறும்.

பெறலே வினையா - பிள்ளை பெறுவதையே வேலையாகக் கொண்ட

பேதை மட மகள் - உடலை விற்று உடலை வளர்த்தல் தீமை பயக்கும் என்று அறியாத பேதைமை சான்ற மடப்பம் பொருந்திய பெண் மூட மகள்.

பொறையோர் - பொறுமை மிகுந்த சான்றோர்.

பொறைகெட இவள் செயல்களால் பொறுமையிழந்து வெகுளும்படியும்.

பெறல் தந்தாள் - பல குழந்தைகளைப் பெற்றுத் தந்தவள். கணவன் அல்லாதவர் களிடத்துத் தொடர்பு கொண்டு பல பிள்ளைகளைப் பெற்றவள்.

இனி, சாம்ப, உக, ஒட, கெட மழுங்க, வறல, மடிய என்னும் எச்சங்களை, முற்றாகக் கொண்டு, சாம்பிப் போக, அழிந்து போக, மறைந்து போக, ஒழிந்து போக, மழுங்கி போக, வறண்டு போக, மடிந்து போக என்று ஏசிச் சாவித்தாள் எனவும் கொள்க.

அறமல்லாத நெஞ்சைக் கொண்ட தலைவனுக்கும், அவனைப் போலும் பலருக்கும், அவர்கள் தரும் பொருளுக்காக அணைய இசைந்து, அதனால் தன் நலன்கள் கெடுமாறு பல பிள்ளைகளைப் பெற்றுத் தந்தவளாகும் அப் பரத்தை எனத் தலைவி அவளைப் பழித்து ஏசினாள் என்க.

இனி, தான் அத்தனை நலன்களையும் பெற்றிருந்தும், அந்நலன்கள் முற்றும் அழிந்த விலைமகளை அவன் நாடினான் ஆகலின் அவன் அறம் கொன்றவனும் ஆகும்; இனி, அவனைச் சான்றோரும் பொறுக்கார், நான் எவ்வாறு பொறுத்தல் இயலும் என்னுங் குறிப்புத் தோன்ற உரைத்தாள் என்றபடி

இது, பெருந்திணையும் பரத்தையை ஏசல் என்னுந் துறையுமாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/195&oldid=1221062" இலிருந்து மீள்விக்கப்பட்டது