பக்கம்:நூறாசிரியம்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

நூறாசிரியம்

ஒத்து ஒத்தது. வினைகள் பல விளைவு ஒன்று.

இவ்வுலகத்து மனஞ்சார்ந்ததும், அறிவு சார்ந்ததும், உடல் சார்ந்ததும், காலஞ் சார்ந்ததும், திசை சார்ந்ததும், இடஞ் சார்ந்த- பூதங்கள் தனித்தும் இணைந்தும் சார்புற்றதும் ஆகிய எண்ணிறந்த வினை முயற்சிகள் பலவாக இருப்பினும், அவையாவற்றின் முடிவும் பயனும் உயிர் துய்ப்புறுவதும், அதன்வழி அது மீமிசை உயர்ந்து மலர்ந்து ஒளிபெறுதலுமே என்க. அஃது, எதுபோலாம் எனில், அனைவரின் படுக்கை நிலைகள் வேறு வேறாயினும், அவர்தம் துயிலும் உறக்க நிலை அவ்வுயிர்களுக்கு ஒய்வும் ஆறுதலும் ஒடுக்க வின்பமும் தரும் துய்ப்புணர்வு ஒன்றாதல் போல் என்க.

இது பொதுவியல் என் திணையும், பொருண்மொழிக் காஞ்சி என்துறையுமாம்