பக்கம்:நூறாசிரியம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

241


திரு. பக்தவத்சலம் முதல்வராக அமர்ந்து, மாணவர்களின் எதிர்ப்புணர்ச்சியைக் சற்றும் பொருட்படுத்தாது தில்லியாட்சியரின் கையாளாக விருந்து, அடக்குமுறைகளையும், வன்மங்களையும் கையாண்டு மாணவர்கள் பலரையும் பொதுமக்கள் பலரையும் சுட்டு வீழ்த்தி, நடுவணரசால் 'எஃகு நெஞ்சர்' என்று பாராட்டப் பெற்றார். அக்கால் நடந்த இந்தியெதிர்ப்புப் போரில் ஏற்பட்ட பொதுவிழப்புகளும், உயிரழிவுகளும் நிகழ்ச்சிகளும் பற்பல. அவற்றுள் சில வருமாறு:

1. அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் இராசேந்திரனும் இளங்கோவனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்கநாதனும் தீக்குளித்தனர்.

3. சென்னை, கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்ற கல்லூரி மாணவர்களைக் காவலர்கள் அடித்து நொறுக்கியதில் ஏறத்தாழ 50 மாணவர்கள் படுகாயமுற்றனர்.

4. முப்பது பொது உந்துகள் கொளுத்தப்பட்டன. .

5. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் ஒன்றரை மாத காலத்துக்கு மூடப்பட்டிருந்தன.

6. சென்னை நகர வீதிகளில் குதிரைக் காவலர்கள் உலாவந்த வண்ணமிருந்தனர்.

7. ஆயிரக்கணக்கான மாணவியர் கறுப்புப் புடவை, சட்டையுடன் மதுரை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

8. சனவரி 25முதல் 28 வரை ஏறத்தாழ 2000 பேர் சிறைப்படுத்தப் பெற்றனர்.

9. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

10. காவலர்கள் கல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்களை அடிக்கையில் பேராசிரியர்கள் பலரும் காயம் பட்டனர்.

11. சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சி, சிதம்பரம், சேலம், நெல்லை, திருவாரூர், சிவகாசி, பட்டுக்கோட்டை, அரக்கோணம், தாளவாடி, ஆரணி, இராணிப்பேட்டை, வேலூர், ஆலந்துளர், வளவனூர், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, திண்டிவனம், நெய்வேலி, வெங்காலூர், புதுவை, கடலூர், குன்னூர், கும்பகோணம், கடையநல்லூர், திருப்பூர், நாகர்கோயில், காரைக்கால், சாத்துர், அருப்புக்கோட்டை, வாசுதேவநல்லூர் முதலிய ஊர்களில் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடந்து வந்தன.

12. சென்னைக் கடற்கரையில் இந்திப் புத்தகங்கள். தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/267&oldid=1221122" இலிருந்து மீள்விக்கப்பட்டது