பக்கம்:நூறாசிரியம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

நூறாசிரியம்


13. அமைச்சர் மகன் ஒருவனும், காவல் அதிகாரி மகன் ஒருவனும், அமைச்சர் ஒருவர் மருமகனும் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

14. மதுரையில் மலையுந்து (Jeep)க்கும் பேராயக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைக்கப் பெற்றது.

15. மதுரையில் வடநாட்டினர் உணவு விடுதியைத் தாக்கி அதன் இந்திப் பெயர்ப் பலகைக்கும், குடியரசு நாளைக் கொண்டாட அமைத்த பந்தலுக்கும் தீ வைத்தனர்.

16. நாடெங்கும் இந்தியரக்கியின் கொடும்பாவிகள் கொளுத்தப் பட்டன.

17. சென்னை இசுடான்லி மருத்துவமனைப் பயிற்சி மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.

18. சென்னை பச்சையப்ப்பன் கல்லூரிக்குள் புகுந்து பேராசிரியர்களை அரம்பர்(ரெளடி)கள் என்று கூறி மாணவர்களைக் காவலர்கள் அம்மணமாக நிறுத்தி வைத்து அடித்தனர். மாணவர்களைப் பார்க்க வந்த பெற்றோர்களும் இந்தக் கொடுமைக்கு ஆளாயினர்.

19. திருச்சி, கீரனூரில் 20 அகவை முத்து என்பவர் இந்தித் திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டு இறந்தார்.

20. கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன.

21. தொடர் வண்டிகள் கொளுத்தப்பட்டன.

22. சோமனூர், திருப்பூர், கரூர், குறிஞ்சிப்பாடி, திருவொற்றியூர், தக்கோலம், மனப்பாறை, புதுவை ஆகிய தொடர்வண்டி நிலையங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

23. சென்னை, வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, துத்துக்குடி, கரூர், திருப்பூர் முதலிய இடங்களுக்கு பட்டாளங்கள் அனுப்பப்பட்டன.

24. அமைச்சர்கள் சுப்பிரமணியமும் அழகேசனும் வேலை விடுப்பு நாடகம் நடத்தினர்.

25. கல்கத்தாவிலும் பள்ளிகள் மூடப்பட்டன.

26. கரூரில் காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டார்.

27. திருச்சி மரக்கடை அஞ்சலகம் தீ வைக்கப்பட்டது.

28. ஏறத்தாழ 20 தொடர்வண்டிநிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.

29. பொள்ளாச்சி நகரமே வெறிச்சோடிக் கிடந்தது.

30. மதுரை, கூடலூரில் இரு காவலர்கள் உயிருடன் கொளுத்தப் பட்டனர். திருப்பூரில் இரு காவல் அதிகாரிகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/268&oldid=1221123" இலிருந்து மீள்விக்கப்பட்டது