பக்கம்:நூறாசிரியம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நூறாசிரியம்
1 ஒன்றிறை

ஒன்றிறை; உலகம் உண்டதன் வழியே.
நன்றிதன் வாழ்க்கை; நாமதன் மக்கள்.
காட்சியுங் கேள்வியுங் கருதலும் புரிதலும்
ஆட்சியுட் பட்ட அளவினானே!
மீட்சியின் றொழுகியவைதிறங் கடவார் 5
மாட்சிமைப் பட்ட பொருளறி யாரே!
மன்னி யுலகெலா மலர்த்தவிப் பானை
முன்னி யுணர்ந்த வுணர்வினார்க் கல்லதை
வகுத்த அறிவொடும் வழக்கொடுங் கூடிப்
பகுத்தாய் வார்க்குத் தொகுத்தவை விளங்கா. 10
உள்ளதன் நாளே, உன்னி யுணர்மின்!
தெள்ள வுணர்ந்தவன் தேர்ந்து தெளிமின்!
கொள்ளுமின் ஆங்கவன் கொடையே; கொண்டு
கொடுமின் அவன்றன் குற்றுயிர்க் கெல்லாம்;
எள்ளுமின் உள்ளம் இகழ்வன;இகந்து 15
தள்ளுமின்; தள்ளித் தனித்தவன் திறலொடு
பொருந்துமின், வாழ்க்கை பொன்றா தாரே!

பொழிப்பு :

ஒன்றே இறை, இவ்வுருள் நிலம் அதன் வழி உண்டாமாறு நின்று இயல்வது. வாழ்நிலை உயிர்கள் யாவினுக்கும் அஃது ஒட்டி நின்று இயங்குநிலை நன்று. அத்தகை வானிலை உயிர்களுள், பொறியும் புலனும்