பக்கம்:நூறாசிரியம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

நூறாசிரியம்


கல்லாப் புலைமொழி - கல்விச் சிறப்பில்லாத புன்மை சான்ற மொழி இழிந்த மொழி - இந்திமொழி.

கற்கெனத்துண்டிய - கற்றுக் கொள்ளுங்கள் எனத் தூண்டிய.

ஒல்லாதப் பேதையர் - இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்தவியலாத பேதைமை சான்றவர்.

அரசு கடிந்து - அரசைக் கடிந்து.

காவல் மடம் - காவல் நிலையம்.

ஏவல் பணிந்து - கட்டளைக்குப் பணிந்து.

வல்சிறை போகி - வலிந்த சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு.

மெய்யடி பட்டு - உடல் வருந்த அடிபட்டு.

நெருப்புரை - கொதிக்கின்ற உணர்வுரை.

உறுப்பறை போகிய - உடல் உறுப்புச் சிதைவு ஏற்பட்ட

உள்ளுயிர் கீண்ட - உள்ளுயிரில் தோய்ந்திருந்த தமிழுணர்வைக் கிளர்ச்சியுறச் செய்த

தாழ நல்விசைத் தமிழ் - என்றும் எதிலும் தாழ்ச்சியுறாத சிறந்த புகழ்பெற்ற தமிழ்மொழி.

நெடுநீர்வையம் - நீண்ட கடலையுடைய உலகம். வண்டிபோல் சுழன்று ஒடுவதால் உலகை வையம் என்றனர்.

வையநாள் வரை - உலகம் நிலைத்திருக்கின்ற நாள் வரைக்கும்.

வட அரசு தென்மாநிலங்களின் மேல் கட்டாயமாகத் திணிக்கின்ற இந்தி என்னும் கல்விச் சிறப்பற்ற புல்லிய மொழியை எதிர்க்கத் திறமையற்ற மாநில அரசு, அதைக் கற்குமாறு மாணவர்களைத் தூண்டியதும், அதால் வெறுப்புற்று மனக் கொதிப்படைந்த மாணவர் பலரும் குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக் கல்வி பயின்ற மாணவர்கள் பலரும், போராட்டம் நிகழ்த்திய முறைமையைக் கூறி, அவ்வுணர்வெழுச்சிக்குக் காரணமாயமைந்த தமிழ் மொழியை வாழ்த்திக் கூறியதாகும் இப்பாடல்.

இப்பாடல் முன்னது திணையும், முதுமொழி வாழ்த்து என் துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/284&oldid=1221156" இலிருந்து மீள்விக்கப்பட்டது