பக்கம்:நூறாசிரியம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

269


‘அன்னைத் தமிழ்க்கே அவலங் கடிந்தோய் நின்னை மகனாப் பெற்றிலேன் பதடியென, இளந்தலை முகர்ந்து குருந்து தோள் நீவி' என்பதில் அன்பும்

‘மல்கு நீர்விழி மறைப்பச் செல்கென விடுத்த சீர்மை நினைந்தே' என்பதில் அமைதியும்;

-இணைந்து வந்து, எண் சுவையையும் இப்பாடல் வெளிக்கொணர் வதை ஓர்ந்து உணர்ந்து மகிழ்க

-இனி, இத்தகைய சுவை நலங்கொழிக்கும் பாடல்களைப் பாடுவீர்களாக என்பதுடன், வீர இளையோனைக் காவல் கையகப்படுத்தாமல் கரந்து வைத்து வாழ்த்தி வழியனுப்பிய முதியோனின் சீர்மையை எம்மைப்போலும் நீவிரும் பாடுக என்பதாகவும் பொருள் கொண்டு போற்றுக என்பதுமாம்.

ஏவா அரைசின் ....... காவலர் - கட்டளையிடாமலேயே அரசினரின் நோக்கும் போக்கும் உணர்ந்து, அதைச் செயலாக்கத் துணிந்து நிற்கும் காவலர் என்க.

காவலர் போறீர்- காவலர் போல்வீர் என்பது, வகரங்கெட்டு, இடையினம் வலிந்து, நெடில் குறுகிற்று.

போல்தல் - போலல்-போறல் (தொல்-பொருள்களகா-3) போல்வீர் -போலீர்-போறீர் ( கவி.9-1, அகம் 29-12).

இற்புகுந்து... என்னலும்- எம் இல்லுள்ளே (கேளாது) புகுந்து, யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டலும்,

மேவுறு சின்மொழி - மேவுறுதலுறும் சிறிய மொழியாகிய இந்தி, சிறிய மொழி என்றது, வளமின்மையும், பரப்பின்மையும், செப்பமின்மையும், சிறப்பின்மையும் கருதி என்க.

கடிந்து- கண்டித்து, தலைக்கூடி ஒன்றுகூடி.

மூவறு நாளா - பதினெட்டு நாள்களாக

ஆவணம் துமிய- கடைத்தெரு துளிபட..

சூர்படு ஓதை - அச்சம் கொள்ளும்படியான போராட்ட ஆரவாரம். ஒதை ஓசை யென்னுஞ் சொல் திரிந்து பேரோசையைக் குறித்தது.

சூடு - துமுக்கிச் சூடு அமலை அமர்க்களப்படுத்தும் நிலை.

கலை புகு கழகம் - பள்ளிகளும் கல்லூரிகளும்,

புலை புக -புல்லிய செயல்கள் புக கல்விக்குத் தேவையற்ற போராட்டம் முதலிய ஆரவாரச் செயல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/295&oldid=1221444" இலிருந்து மீள்விக்கப்பட்டது