பக்கம்:நூறாசிரியம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

327


சீர்கெட்ட காலையும் தூர்வாரிப் புதுக்கப்பெறும் குடிநீர்க் கிணறும், முடைநாற்றம் வீசுதலால் மூடித் தூர்க்கப் பெறும் முதுநீர்க் குட்டையும் இப்பாடலில் நிரலே ஒப்புரவாளர்க்கும் பதுக்கற் செல்வர்க்கும் உவமைகளாகச் சுட்டப்பட்டன.

ஊர் உண் கூவல் ஊருணி

ஊர்-ஊர்வாழ்மக்கள். பிற உயிரிகளும் பயன்கொள்ளுமேனும் மேனிலை நோக்கி மக்கள் எனப்பட்டது. இது யாவருந் தொட்டு’ என்பதனானும் அறியப்படும்.

உண்ணுதல் என்னும் பொதுவினையால் பருகுதல் மட்டுமின்றி அடுதலும் சுட்டப் பெற்றது.

கூவல்- கிணறு

தூர் உள் மண்டி நீர் இழிபட்டு என உள்ளே கும்பியும் கசடும் மிக்கு நிறைந்து நீர் நலங்கெட்டது என்று.

தூர்-கும்பியும் கசடும். கும்பியாவது நொதித்த சேறு.

மண்டுதல் -செறிவுற நிறைதல்,

யாவரும் தொட்டுப் புதுக்குதல் நந்த ஊர்மக்கள் யாவருங் கூடித் தூர்வாரிச் சீர்ப்படுத்துதல் போல,

தொட்டு தோண்டி புதுவதன்று ஆகலின் தோண்டுதல் துர்வாருதலைக் குறித்தது.

புதுக்கல்- பழுதுபட்டதனைச் சீர்ப்படுத்துதல்.

நந்த -உவமஉருபு

உணல் யாம் என்றியர்: யாம் பகிர்ந்து உண்போம் என்று கூறுவர்.

என்றியர் என்னியர் (77று கூறுநர்) என்பது என்றியர் என நின்றது.

நிரப்பின் ஒப்புரவாரை ஒதுக்கவர் ஒப்புரவாளர் வறுமையுற்றவிடத்து அவரைப் புறக்கணித்து ஒதுக்கி விடார்; போற்றிக் காப்பர்.

நிரப்பு:வறுமை , மங்கல வழக்கு

ஒப்புரவாரை ஒப்புரவாளரை ஒப்புரவாளராவார் உலக நடை யறிந்து பிறர்க்கு உதவிசெய்து வாழ்வோர்.

படுதுயர் முடைசேர் முதுநீர்-மூடுநர் ஆங்க

மிகுந்த துன்பத்தைச் செய்கின்ற தீயநாற்றம் வீசும் நெடுநாள் நீர் தேங்கி நிற்கும் குட்டையைத் துர்த்து மூடுவாரைப் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/353&oldid=1221217" இலிருந்து மீள்விக்கப்பட்டது