பக்கம்:நூறாசிரியம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

337


77 துய்யா வாழ்க்கை


மருப்புநீண்டு முறுக்கமேறி
இருப்பகன்று மடியிறங்கி
நடைதாழ்ந்து மடைவிரும்பினும்
மையா யாண்டுங் காரா வாகா
துய்யா வாழ்க்கை தோயாநின்று 5
கூறையின்றிக் கீரைமிசைந்து
மெய்மெலிந்தே ஒச்சின்றிக்
கையற்றுத் துணைசோரினும்
மெய்யே நின்ற மேலோர்
பொய்யும் நினையார் புரையார் யாண்டே! 10


பொழிப்பு:

கொம்பு நீளவளர்ந்து திருகுற்று, பின்பக்கம் அகலமுடையதாகி பான்மடி தாழ்ந்து, நடைதளர்ந்து, புல்லுணவை விரும்பினாலும் ஆமா எக்காலத்தும் எருமையாதல் இல்லை. நுகராத வாழ்க்கையிற் பொருந்தி நல்லாடை இல்லாமலும் கீரையையே உணவாக உட்கொண்டும் யாக்கை மெலிந்து வீசிநடக்கும் வீறின்றி, செயலறவுற்று, துணையாய் இருந்தோரும் நெகிழ்ந்தவிடத்தும் மெய்ந்நெறியின்கண் உறைத்து நின்ற சான்றோர் பொய்யை நினைக்கவும் மாட்டார், எக்காலத்தும் போலிச் செயல்களை மேற்கொள்ளவும் மாட்டார்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள்சார்ந்தது.

சான்றோர் பெருமக்கள் எத்துணை எளிய வாழ்க்கைக்கும் இன்னலுக்கும் ஆட்பட் நேர்ந்தாலும் பொய்யும் போலியும் கைக்கொள்ளமாட்டார் என்று விளக்குவது இப்பாட்டு

ஆமாயாண்டும் காராவாகாது. அது போலச் சான்றோர் யாண்டும் நிலைமாறார் என்னும் உவமை இப்பாடற் கருத்தை விளக்கி நிற்கின்றது. இஃது.எடுத்துக்காட்டுவுமையாதல் நோக்கி யறிக

மருப்பு நீண்டு.முறுக்க ஏறி : கொம்பு நீளவளர்ந்து திருகுற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/363&oldid=1209182" இலிருந்து மீள்விக்கப்பட்டது