பக்கம்:நூறாசிரியம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

நூறாசிரியம்


மாட்டுக்குத் தலையின் கண் எடுப்பாக விளங்குவது கொம்பாகவின் அதனை முற்கூறினார். செறிந்த வள்ர்ச்சியால் திருகப்பெறுதலின் முறுக்கமேறி என்றார். கிளிக் கொம்பு, சாட்டைக் கொம்பு, வீணைக்கொம்பு, பறட்டைக் கொம்பு முதலியனவாக மாட்டின் கொம்பு உலக வழக்கில் பல்வேறு குறியீடுகளைப் பெறுதலானும் அதன் சிறப்பு அறியப்படும்.

இருப்பு அகன்று -மடைவிரும்பினும் : இடை அகலமுற்றும், பான்மடி இறங்கியும், நடை தளர்ந்தும், புல்லாகிய உணவை விரும்பினாலும்,

இருப்பு :பின்புறம்.

மடி -பால்சுரக்கும் காம்புகளைக் கொண்டது.

மடை- உணவு மாட்டுக்குரிய உணவாகிய தீனி சிறப்பாகப் புல்லேயாம். மேய்ச்சலை விரும்பினும் எனக் கொள்க!

மையா யாண்டும் காரா வாகா: காட்டு ஆக்கள் எக்காலத்தும் எருமைகளாகமாட்டா.

மையா -காட்டுஆவு. காரா- எருமை.

துய்ய வாழ்க்கை தோயா நின்று- நுகர்தல் இல்லாத வாழ்க்கையின் கண் பொருந்தி நின்று.

உலகியல் இன்பங்களை நுகராத வாழ்க்கையைத் துய்யா வாழ்க்கை என்றார்.

தோயா நின்று- தோய்ந்து நின்று.

கூறை இன்றி- உடுத்திக் கொள்ளுதற்கு நல்ல ஆடையில்லாமல்,

கூறை - துணி

கீரை மிசைந்து- கீரையை உணவாக உட்கொண்டு.

கீரையைத் துணைக்கறியாக உட்கொள்ளுதலின்றி முழு உணவாக உட்கொண்டு என்றவாறு.

மெய்மெலிந்தே- யாக்கை மெலிந்து

என்பெழுந்து இயங்கும் யாக்கையர்- என்றாங்கு மேனி மெலிந்து,

ஒச்சு இன்றி- கைவீசி நடக்கும் வீறின்றி.

ஒச்சுதல்-வீசுதல்,

ஒச்சு என்பதற்குத் தலைநிமிர்பு எனப் பொருள் கொண்டுதலை தாழ் உடற் கூனி எனக் கூறலுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/364&oldid=1209183" இலிருந்து மீள்விக்கப்பட்டது