பக்கம்:நூறாசிரியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4 உள்ளத்தாட்சி


பரல்பரந்து அரலைவாரி
நுரைதுங்கிப் புரைபுகுந்தே
உள்ளோடிப் புறநடக்கும்
வெள்ளம் போலெம் உள்ளத் தாட்சி!
சொல்லிற் போகா நினைவு முட்ட 5
அல்லில் விழிக்கும் பகலிற் றுயிலும்
பல்லார் முன்னம் பாடுவாய்ப் படுத்தி
நல்லார் போய செந்நெறி நயக்கும்.
அஃதான்று 10
புனல்சாய்க்கும் புல்லென்கோ
அனலுருக்கும் மெழுகென்கோ
மேற்சிதர்ந்தே உட்கவிந்த
கார்போர்த்த கதிரென்கோ
தூவெண் பஞ்சின் திறத்த தாகி
நாவும் நெஞ்சும் ஒன்றி நடக்கும் 15
இனியர்க் குவந்தே இன்னார்க் கஞ்சி
முனிவி னடுங்கிக் கனிவிற் கலக்கும்
என்னிற்கா திறமுரைக்கோ
தற்படுத்தும் பெட்புரைக்கோ
பொருள்சேரின் புறமிறைத்தே 20
அறிவயிரும் நிரல் நிரப்பின்
உகுகண்ணிர் உளங்கொளுத்த
தகுமனைமேல் அழல்வீசிப்
புறவாழ்க்கைப் புற்பழித்தே
அகவாழ்க்கை அடிப்படுக்கும் 25
முட்டத் தடங்கிய முற்றா நெஞ்சின்
ஆட்டத் தழுந்திய இன்பம்
நாட்ட நாட்ட நாதா டாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/38&oldid=1221106" இலிருந்து மீள்விக்கப்பட்டது