பாவலரேறு பெருஞ்சித்திரனார்
355
ஏகத் தகாத சேர்க்கையை ஏகாச் சேர்க்கை என்றார். பெரும்பாலும் கள், சூது, வரைவின் மகளிர் தொடர்பெல்லாம் நண்பர்களாலேயே வருதலின் அவன் கெடுதலுக்குக் கரணியமான கூடா நட்பை ஈண்டுக் குறித்தார்.
தளிமகள் நுகர்ந்து -விலைமாதினிடத்தில் இன்பந் துய்த்து.
கோயிலில் தொண்டு செய்யப் புகுந்து நடனமாடத் தொடங்கி தேவரடியாரானோர் விலைமாதராய் இழிந்தாற்போலக் கோயிற்பெண்டிர் எனப்பொருள்படும் தனிமகளிரும் விலைமாதராயினர். தளி கோயில்.
களி மிக மண்டி - மயக்கம் மிகுமாறு கள்ளை அதிகமாகக் குடித்து.
களி - கள்ளுண்ட மயக்கம்.
மிக - மிகுமாறு. - மண்டி நிரம்பக் குடித்து.
வெளியில் துயில்படுக்கும் - தெருவில் உறங்குகின்ற
விழலை - விழல் போலும் புல்லனை.
விழல் - உள்ளீடற்ற பயிர் புல் வகைகளுள் ஒன்று பயன்பாடற்றது. ‘விழலுக்கு இறைத்த நீர் என்பது பழமொழி.
பேறு என' - மகவு என-பிள்ளை என்று.
முனை ஈன்றனமே தோழி - முன்னாளில் ஈன்றோமே, தோழி! தன் கணவனையும் உள்ளடக்கி ஈன்றனமே என்று தோழியிடம் வருந்திக் கூறினாள்.
இது வாகை என்னும் புறத்தினையும் மூதின்முல்லை என்னும் துறையுமாம்.