பக்கம்:நூறாசிரியம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

நூறாசிரியம்


86 விழுபசிக் கெழுதும்


வளிநிலந் துறந்து விண்கோள் வெளவி
அளிமழை பொழித்துக் கனவி மாற்றிக்
கருமுழை திரளா வுருவகை தோற்றி
அருமுயிர் நிலைப்பை அவரவா நீட்டுந்
திறத்தோ ராயினும் பிறத்தோ ரெல்லாம் 5
இறத்தன் மாறார் இருக்கு ஞான்றையுங்
கட்புல னுள்ளுழிக் காட்சியு முளதால்
உட்செவி யுள்ளுழி யொலிக்கதுப் புளதால்
மோப்பொறி யுள்ளுழி யாப்புயிர்ப் புளதால்
உகலுட லுள்ளுழி உளமுள தாகலின் 10
எழுபசிக் கேறா முளத்து
விழுபசிக் கெழுத்தும் வேண்டுவ யாண்டே!

பொழிப்பு:

காற்று இயங்கும் இந் நில மண்டிலத்தை விட்டேறி வானத்துச் சுழலும் கோளைப் பற்றிக் குளிர்ச்சி பொருந்திய மழையைப் பொழிவித்து, கதிரவனின் இயல்பை மாற்றி இருளடர்ந்த மலைவிடரை திரட்சியான உருவமுடைய வகையில் தோற்றுவித்து அரிய உயிர்நிலைப்பை அது நீங்கும் காலத்தே அவர்தம் ஆசையை வெளிப்படுத்துமளவும் நீட்டித்து வைக்கும் திறமுடையோராயினும் இவ்வுலகில் பிறந்தோரேல்லாம் இறத்தலைத் தவிர்ப்பாரல்லர் வாழுங் காலத்தும் கண்ணாகிய புலன் இருக்குமட்டும் காணப்படும் காட்சியும் உண்டு, உள்ளிடமான செவி இருக்குமட்டும் கேள்வியும் உண்டு மோத்தலுக்குரிய பொறியாகிய மூக்கு இருக்கு மட்டும் மூச்சை யிழுத்தடக்குதலும் வெளியிடுதலும் உண்டு அழியத் தக்க உடல் இருக்குமட்டும் உள்ளமும் உண்டு; ஆதலின் எம் வயிற்றில் எழும் பசியைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு யாம் முயற்சி மேற்கொள்ளமாட்டோம்; உள்ளத்தின்கண் பொருந்திய மெய்யறிவுப் பசியினாலேயே முனைகின்றேம். யாம் விரும்புவன யாண்டு உள!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/390&oldid=1209674" இலிருந்து மீள்விக்கப்பட்டது