பக்கம்:நூறாசிரியம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

நூறாசிரியம்


உள்செவி உள்உழி ஒலிக்கதுப்பு உளது - உள்ளிடமான செவி இருக்கும்மிடத்து ஒலியைக் கதுவுதலும் உண்டு.

கண்ணும் மூக்கும் போலாது உள்வாங்கி யிருத்தலின் செவியை உட்செவி என்றார்.

கதுப்பு- கதுவு; பற்றுதல்

மோப் பொறி உள்உழி யாப்பு உயிர்ப்பு உளதால் - முகரும் பொறியாகிய மூக்கு உள்ளவிடத்து மூச்சு உள்ளிழுத்தலும் வெளியிடுதலும் உண்டு.

மோப்பொறி-மூக் யாப்பு - மூச்சை உள்ளிழுத்து நிறுத்துதல்,

உகல் உடல் உள்உழி உளம் உளது ஆதலின்- அழியத்தக்க உடல் இருக்குமிடத்து உள்ளமும் உள்ளது ஆதலினால்,

உகுதல் அழிதல்.

எழுபசிக்கு ஏறாம் -வயிற்றில் தோன்றும் பசியைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு முயற்சியை மேற்கொள்ள மாட்டேம்.

ஏறாம் என்றது முயற்சிப்படியில் அடிவைக்க மாட்டேம் என்றாங்குக் கூறியது.

உளத்து விழுபசிக்கு எழுத்தும் - உள்ளத்தில் பொருந்திய மெய்யறிவுப் பசியினாலேயே முனைகின்றேம்.

எழுதும் என்பது விரித்தல் வேறுபாடுற்று எழுத்தும் என நின்றது.

விழுதல் பதிதல், பொருந்துதல். காதில் விழுந்தது என்றல் காண்க.

வேண்டுவ யாண்டே - யாம் விரும்புவன யாண்டு உள்ளன.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/392&oldid=1209680" இலிருந்து மீள்விக்கப்பட்டது