பக்கம்:நூறாசிரியம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

நூறாசிரியம்


நூலோர் அழுந்திய உயர்வழிப் பொருந்தி - விழுமிய நூல்களைப் பயின்று உணர்ந்த அறிஞர் பெருமக்கள் கடைப்பிடித்த உயரிய வாழ்க்கை நெறியில் பொருந்தி,

அழுந்திய -கடைப்பிடியாகக் கொண்ட

மேலோர் தாம் என்று உள்பெற உட்கி - மேன்மக்கள் என்று தம்மையும் அவ் அறிஞராரொடு உள்ளடக்கிக் கூறிக் கொள்ளுதற்கு அஞ்சி.

மேற்கூறிய அறிஞர்கள் வரிசையில் தம்மையும் இணைத்துக் கொள்ளுதற்கு நாணத்தால் அஞ்சி என்றவாறு.

உட்கி - அஞ்சி.

முனிவும் காய்வும் மூளா நேர்மையும் - சினமும் வெறுப்பும் தோன்றாத செம்மையும்.

சினமும் வெறுப்பும் நடுநிலை பிறழ்தற்கு ஏதுவாம் ஆதலின் அவை தோன்றாத நேர்மை என்றார்.

முனிவு-சினம். காய்வு வெறுப்பு. மூளாத தோன்றாத நேர்மை - செம்மை, நடுநிலை.

இனியார்க்கு அன்பும் - தம்மைச் சார்ந்தவர்கட்கு அன்பும். எயன் அன்பாவது தொடர்புடையார்மாட்டு நிகழும் மனநெகிழ்ச்சி பவாகலின் இவ்வாறு கூறினார்.

இன்னார்க்கு அருளும் - தமக்கு இனியவர் அல்லாதவரான பகைவர்மாட்டு அருளும்,

அனைவர் மீதும் நிகழும் அன்பின் விரிவே அருளாதலின், இவ்வாறு கூறப்பட்டது.

ஓர்ங்கால் மனமும் ..... நோற்பும் - ஆராய்ந்து பார்க்குமிடத்து உள்ளமும் உடலும் ஒடுங்கப் பெற்றுச் சிறந்த தவ ஒழுக்கத்திற்குச் சமமான மிகுந்த பொறுமையும்.

இது எத்தகையது என்று இன்னொன்றொனொடு ஒப்பு நோக்கிக் கூறுதலின் ஓர்ங்கால் என்றார். ஓர்தல் - ஆராய்தல்.

கொண்டோர் ஆகி - உடையவராகி,

மேற்கூறிய அன்பும் அருளும் பொறுமையும் உடையாராகி என்றவாறு.

ஊண்துயில் மறந்து - உண்டியும் உறக்கமும் மறக்கப் பெற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/394&oldid=1209685" இலிருந்து மீள்விக்கப்பட்டது