பக்கம்:நூறாசிரியம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

375


ஒடு. சிப்பியின் கூடு, அவிழ் செய்ய உடைய மணி தொண்மணிகளுள் ஒன்றான முத்து.

தேடு அரு கல்வி வளனே சிறந்தது - தேடுதற்கு அரிய கல்வியாகிய செல்வமே தலையாயது.

கல்வி என்று ஈண்டுப் பொதுப்படக் கூறினும் அஃது உலகியற் கல்வி போலாது சான்றோர் உளம்பொதிந்த மெய்ம்மை சான்ற கல்வியைச் சிறப்பாகக் குறித்தலால் அது தேடுதற்கு அருமையுடைமை கண்கூடு.

ஆகலின் சான்றோர்.அனப் பொதிந்தனரே - கல்விச் செல்வமே விழுமியது ஆகலின் சான்றோர் பெருமக்கள் அக் கல்வித் துறைகளை உள்ளத்தே பொதிந்து கொண்டனர்.

அன.அத்தகைய கல்வியின் துறைகள். பொதிந்தனர். மனம்பற்றினர்.

ஒதுக ஒதுக உன்னி ஓதுக - கற்க கற்க மனம் ஒன்றிக் கற்க,

ஒதுதலாவது பலுக்கிப் படித்தல்; ஈண்டுக் கற்க என்னும் அளவில் நின்றது. உன்னி-மனம் ஒன்றி.

ஏதம் இல் செல்வம் சேதம் இல் காக்க ஏமச்செப்புழை இடுதல் போல - குற்றமற்ற செல்வத்தை அழியாமற் காக்கும் பொருட்டு அதனைக் காப்புப் பெட்டகத்தில் இட்டுவைத்தல் போல

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துணிர் பெய்திரீஇ யற்று

என்றலின் சேதமின்றிக் காக்கப்பட வேண்டிய செல்வம் ஏதமில் செல்வம் எனப்பட்டது.

ஏதம் குற்றம் சேதம் அழிவு ஏமம்-காப்பு: செப்பு பெட்டகம்

எப்பின் வைப்பாய் இருத்தினர் பொருளே - இளைப்புக் காலத்து உதவும் பொருளாகக் கல்விச் செல்வத்தை மனத்தில் இருத்திக் கொண்டனர்.

வைப்பு காத்துவைக்கும் பொருள்.

உய்யல் வேண்டுவோர் ஊன்றிக் கொய்யல் முறையே துன்பத்தினின்றுத் தப்பிக்க விரும்புவோர் மனம் தோய்ந்து கல்வியை முறையாகக் கொய்து கொள்க!

முறையே கொய்தலாவது தக்காரை யடுத்தும் தகுநூல் தேர்ந்தும் படிமுறையாய்ப் பயிலுதல் பூக்கொய்து நிறைத்தல் போல் கல்வியைக் கொள்க என்பார் கொய்தல் என்றார். கொய்தலாவது மென்மையாகப் பறித்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/401&oldid=1221224" இலிருந்து மீள்விக்கப்பட்டது