பக்கம்:நூறாசிரியம்.pdf/405

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

379


உழத்தல் துன்புறுத்தல், துன்புறுத்தலின் என்றவாறு,

முற்றிய கொள்கை முழுநலந் தேக்கும் நீரவர் - திண்ணிய கொள்கைத் திறத்தால் மக்களுக்கு முழுமையும் நலஞ்சேர்க்கும் இயல்புடையார்.

முற்றிய- முதிர்ந்த செறிந்த,

முழுநலத் தேக்குதலாவது தந்நலம் கருதாதும் சிறிதேனும் தமக்கெனக் கொள்ளாதும் தம் பணியின் பயன் பொதுநலத்திற்கே சேர்த்தல், நீரவர்தன்மையாளர்.

உளக்கனல் நில்லாது - உள்ளத்தே துயரத்தால் மூண்ட நெருப்பு அத்துயரஞ் செய்தாரை அழிக்காமல் அணையாது.

ஊரவர் - ஊர் தோறுமுள்ள நாட்டு மக்கள்.

திரளும் - ஒன்று கூடி எழும்; எழுந்து போராடும்.

நாளும் ஒன்று உண்டு - ஒரு நாள் உள்ளது.

நாளும் என்றது காலத்தில் அண்மைபற்றி விரைவில் வருக என்பதாம். இப்பாடலிற் கண்டாங்குத் தென்மொழி அன்பர்கள் ஊர் ஊர் எங்கனும் பாவாணர்க்காகக் குரல் கொடுத்ததும், உலகத் தமிழ்க் கழகம் நிறுவப் பெற்றுப் பன்னூறு கிளைகள் பரப்பிப் பாவாணர்க்காக முழங்கியதும் ஊர்வலங்கள், கருத்தரங்குகள், மாநாடுகளெல்லாம் நடைபெற்றதும் உண்மை நிகழ்ச்சிகளாய் நிறைவேறின.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் புதுவகைத் துறையுமாம்.