பக்கம்:நூறாசிரியம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

381


கூனிக் குறுகி இரந்து வாழ்வாரினும் இழிவான பிழைப்பினர் என அவரை இடித்துரைப்பதாக அமைந்தது இப்பாட்டு.

செடிகொடி மானும் செடியும் கொடியும் மரமும்,

செடி குத்துச் செடியும் பெருஞ்செடியும் எனவும், கொடி நீரில் படர்வதும் நிலத்தில் படர்வதும் கொம்பில் இவர்வதும் எனவும், மரம் குறுமரமும் பெருமரமும் என்பதோடு புறக்காழனவும் அகக்காழனவும் எனவும் பலவகைப் படுத்தலறிக!

சிப்பியும் சங்கும் - சிப்பி, சங்கு முதலான நீர்வாழ்வனவாகிய இயங்குதினை உயிரிகள்.

துடியல் எறும்பும்- துடியலும் எறும்பும்.

துடியலும் எனும்பும் முதலாயின ஊர்வனவாகிய இயங்கு திணை உயிரிகள்.

துடியலாவது ஒருவகை எறும்பு.

உடுக்குப் போலும் உடலமைப்புடைய ஒருவகை ஊரி என்ப.

தும்பியும் புள்ளும் - வண்டும் பறவையும்.

வண்டும் பறவையும் முதலாயின பறப்பனவாகிய இயங்கு திணைஉயிரிகள்

விலங்கு - விலங்குகள்,

விலங்குகள் நடப்பின வகையைச் சேர்ந்த இயங்குவன உயிரிகள்.

என்று இவை - என்று சொல்லப்படும் உயிரிகளும்

வினை செய்து உயிர்த்தலோடு-தாந்தாம் செயற்பட்டு உயிர் வாழ்வதோடு,

நிலைத்திணை உயிரிகளின் செயற்பாடுகளாவன காற்றை உறிஞ்சி வளியிடுதலும், நீரையுறிஞ்சி ஆவியாக விடுதலும் பூத்தலும் காய்த்தலும் பிறவுமாம்

இயங்குதினை உயிரிகளின் செயற்பாடு வெளிப்படை

இலங்கு மாந்தர்க்கு இயற்றலும் ஆக விளங்குகின்ற மக்களுக்கு உதவுவனவும் ஆக

விளங்குதலாவது மேற்கூறிய ஓரறிவு உயிரிகள் முதல் ஐயறிவு உயிரிகள் ஈறான அனைத்து உயிரிகளிலும் மேம்பட்ட ஆறாவதான மனப்புலனையுடைமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/407&oldid=1211226" இலிருந்து மீள்விக்கப்பட்டது