பக்கம்:நூறாசிரியம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

நூறாசிரியம்


மொய்நீர்வேவிப் புதுத் தீவு உயிர்க்கும் சுற்றிலுஞ் சூழ்ந்த நீரே வேலியாகி நிற்க, நடுவில் எழுந்த புதுமையான தீவின்கண் தோன்றிய

மொய்த்தல்-சூழ்தல் உயிர்த்தல் பிறத்தல்

புன்குரல் ஒருவனும் - அடங்கிய குரலையுடைய எளிய மாந்தர் இனத்தானும்

அறிவு அறியா இருள் அடர் மரக்கான்மிசை - அறிவாலும் அறியப்படாமல் இருள்மண்டி அடர்ந்திருக்கின்ற மரங்கள் நிறைந்த காட்டகத்தே

குறிகடவா எய்கூர்வேல் உயிர்உண - குறி பிழையாமல் எய்யும் கூரிய வேலானது உயிரை உண்ண

வீழ்பட மாந்தர் வெந்நீர் உறிஞ்சி- அறியாமல் அங்குவந்த மாந்தர்தம் சூடான குருதியை உறிஞ்சி

ஏதமுள்ளமையை அறியாமல் வந்தமையின் மடமாந்தர் என்றார். கொலை செய்யப்பட்டவர் உடலை உடனே உண்டனர் என்பது தோன்ற அவ்வுடற் செந்நீர் வெந்நீர் எனப்பட்டது.

சூழ்ந்து உடல் உண்ணும் பாழ் இனத்து ஒருவனும் - அவரைச் சூழ்ந்து அவர் உடலை உண்ணும் கொடும் பண்பு சான்ற இனத்தானும்,

தம் பிறப்பு இறந்தே - தம்தம் பிறப்பும் நாடும் பழக்க வழக்கங்களும் கடந்து

பிறப்பாவது இனம் - தமக்குள் எம்பிறப்பு என்னும் தமக்குள்ளே ஒருவரையொருவர் எம்பிறப்பு என்று கூறிக்கொள்ளும்

இனிய நல்நாளே - இனிய நல்ல நாள்

யாவரும் மகிழ்ந்து உறவாடுமாறு போரும் அழிவுற்ற நாளாதலின் இனிய நன்னாள் என்றார்.

நெடும்தொலைவு இலையே கடுஅணி மைத்தே - நெடுந்தொலைவில் இல்லையாக, குறுகிய கால எல்லைக்குள் வருவதே.

அணிமையை வலியுறுத்தற்கு எதிர்மறை வாய்பாட்டான் வரும் தொலைவுக்கு நெடுமை குறித்த அடையாற் பயனில்லை யாயினும் அது அணிநயமுற நின்றது.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/412&oldid=1211236" இலிருந்து மீள்விக்கப்பட்டது