பக்கம்:நூறாசிரியம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

நூறாசிரியம்

நிலையில் உள்ளவர்கட்குச் சிறு உதவி செய்தலாலே அழிந்து போனவர் யாருமில்லை.

எவர் வெகுண்டாலும் யாம் சிறப்பில்லாதவற்றைப் போற்றுவே மல்லேம் எவர் இழிவுபடுத்தினும் சிறந்தவற்றை யாம் இகழேம்; தகாதன அழியும், தக்க அழியா தோல்வியும் வெற்றியும் ஏற்போர் தகுதியைப் பொறுத்தனவே. பொருந்துவன பொருந்தாது ஒழியினும் யாம் இறப்பினும் என்றும் சிறப்பு உண்டு என்று எடுத்துரைப்பது இப்பாட்டு,

இற்றைப் புரிந்து இவர். . . எம்தாய் பயந்திலள் - இன்று யாம் உதவி புரிய, இவர் ஏற்றுக் கொள்ளுதற்கு உரியவர் என்று கருதி அன்று எம்தாய் எம்மை ஈன்றாளல்லள்.

இன்ன காலத்து இன்னின்னார் ஈதற்கும் ஏற்றற்கும் உரியார் என்று யாரும் இவ்வுலகில் பெறப்படவில்லை என்றவாறு,

இந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

என்றார் திருவள்ளுவரும்

புரிந்து- உதவிசெய்து பயந்திலள் - ஈன்றாலல்லள்.

அழிவார்க்கு ஒன்று உள் உவந்து உயிர் புரந்திட - இறக்கும் நிலையில் துன்புறுவோர்க்கு ஒரு பொருளை மனம் உவந்து அளித்து அவர்தம் உயிரைக் காப்பாற்றுதலாலே.

உவந்து - மகிழ்ந்து ஈண்டு விருப்பத்தைக் குறித்தது.

ஒருவர் என்றும் அழிந்திலர் - ஒருவர் எக்காலத்தும் அழிந்தாரல்லார். எவரும் அழிவாருமல்லர் என்பது பெறப்படும்.

இல்லவர் எனினும் உலர்நா ஊற ஒருகை நீரே - தாம் வறுமையுற்றவரே யாயினும் பிறரது உலர்ந்த நா ஊறப்பெறுதற்கு அவர்க்கு அளிக்கப்பட வேண்டியது ஒரு கையளவு நீரே.

இல்லவர்- வறுமையுற்றார்; உலர்நா-வறண்ட நா

சிலர் பலர் வெகுளினும் சிறப்பில போற்றேம் - ஆங்காங்குச் சிலரும் பலரும் எம்மாட்டுச் சினந்தாலும் சிறப்பிலாதவற்றை யாம் போற்றுவேம் அல்லேம்.

சிலர்பலர் - ஓரிடத்துச் சிலரும் பிறிதோரிடத்துப் பலரும் எனக் கொள்க!

எவர் இழி செயினும் ஏற்றன. இகழேம் - எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்புடையவற்றை யாம் இகழ்வேமல்லேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/414&oldid=1211245" இலிருந்து மீள்விக்கப்பட்டது