பக்கம்:நூறாசிரியம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

நூறாசிரியம்

பொருளீட்டித் தம் வாழ்க்கை மற்றையோர்க்கும் பயன்படுமாறு வாழ்வித்து வாழும் ஒழுக்கந் தவறாத மக்கள்.

நலம்- செல்வம். செல்வம் எனப் பொதுப்படக் கூறினும்கைப்பொருளே யன்றி அறிவுச் செல்வமும், உழைப்புச் செல்வமும் பிறவுங் கொள்ளப்படும்.

கவர்ந்து என்றது நல்லியல் மாந்தர்க்கு நேரும் சூழ்நிலை நெருக்கடி களைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அறிந்தும் அறியாமலும் அவர்தம் செல்வத்தை வலிந்து கைப்பற்றிக் கொண்டு என்றவாறு.

உண்ணுதலாவது பசிதணிய உண்பதுமட்டுமன்று; இனிது நுகர்தலுமாம்.

புல்லியர்ச் செகுக்கும் - கீழ்மக்களை அழிக்கின்ற.

புல்லியர் கீழ்மைக் குணங்களுடையார், செகுத்தல் அழித்தல்.

அழித்தலாவது மென்முயற்சியால் மட்டுமன்றி வன்முயற்சியாலும் கீழ்மக்கள் தம் கயமைக் குணங்களைக் கைவிட்டு மனந்திருந்தச் செய்தல்.

பூட்கை யோனே - கொள்கையாளேனே!

பூட்கை உள்ளத்து உறுதியுறக் கொண்ட கொள்கை

உணர்வு நுண்ணிய உளமும் - உணர்வு நுணுகியிருக்கும் உள்ளமும்.

தம் முயற்சிகளைத் திறம்படச் செய்யவும் தற்காத்துக் கொள்ளவும் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுதலின் இவ்வாறு கூறினார்.

உளத்துப் புணர்வு மன்னிய உரையும் - உள்ளத்து உணர்வொடு பொருந்தி நிற்கும் சொல்லும்.

இவன் வாய்தந்தன கூறாது உள்ளத்து உணர்வொடு பொருந்தக் கூறுதல்,

உரைத்தநிலை வினை பண்ணும் மதுகையும் - சொல்லிய நிலை செயற் படுத்தும் ஆற்றலும்,

வினை பண்ணுதலாவது செயற்படுத்தல். மதுகைஆற்றல்.

நிவந்த புலரா வாழ்வொடு பொருந்தினர் வயினே - உயரியதும் வாடுதலில்லாததுமான வாழ்க்கையில் ஈடுபட்டவர்களிடத்தில்

புலரா வாழ்வாவது நாளுக்கு நாள் பிடிப்புத் தளராத வாழ்வு.

நிவந்த உயர்ந்த புலர்தல் உலர்தல்; வாடுதல். வயின்-இடத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/420&oldid=1211268" இலிருந்து மீள்விக்கப்பட்டது