இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
409
மேலை என்றது காலத்தால் பண்டைய நிகழ்ச்சிகளையும் இடம் பற்றி இனிவரும் நிகழ்ச்சிகளையும் குறித்து நின்றது.
கூட்டல் மெய்என- இறைமையில் பொருத்துதல் உண்மையில் நிகழ்வதாம் என்று.
ஒன்றிய நினைவில் யாமே - ஒருமையுற்ற உணர்வோடும் யாம்
என்றும் துயிலுதும் எதிர்க இன் கனவே - நாளும் துயிலுகின்றேம். இனிய
கனவு வாய்ப்பதாக!
இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.