பக்கம்:நூறாசிரியம்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

421


6

ஏவலன் மகனே! ஏவலன் மகனே!
சேவலங் கொண்டை சிலிர்ப்ப வடர்சிறை
எற்றிப் புடைத்தே இருள்கிழித் திசைக்குங்
கூவல் மடுத்துக் குற்ந்துயில் கலைந்து
யாறு நடந்து நறுநீர் கொணர்ந்து 5
கன்று காட்டி ஆமடி கறந்து
நாளங் காடி நண்ணி மீளுற்று
மிச்சில் அயின்றே உச்சி யகன்று
சாய்க்திர் கண்டு மேய்புலம் நிரையொடு
சென்று மீண்டு சிறார்யா மகிழச் 10
சொல்லாடித் துயில்போக்கும் நுந்தை போல
எல்லிருங் கொண்டிரோ ஏவலன் மகனே!

7

ஒருபுடை அவலம் இம்மை உள்ளிப்
பெரும்படை தாக்கிய சிறுவூர் போலச்
சிதைவுறும் உளமும் உயிரொடும் உடலே!
புதைவுறும் உயிரும் உளத்தோ டுடலும்
ஒருபுடை மகிழ்ச்சி பெறுநிலை யுற்றன 5
இதுகாண் தோழி கவடி வாழ்க்கை
எய்யவும் இலாது பொய்யவும் இலாது
கவ்வலும் விடலும் உயிரொடு காலனே!

(இம்மையில் தலைவனின் முந்தியிறப்பதும்,அவனின் பிந்தியிறப்பதும் மாறி மாறி எண்ணி வருந்தித் தலைவி தன் நெஞ்ச அவலத்தைத் தோழிக்குச் சொல்லியது)

8

கேளே வேண்டெம் வரைவே யெந்தையுட்
கோளே தகவோர்க்குக் கொடையே கூர்ங்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/447&oldid=1234692" இலிருந்து மீள்விக்கப்பட்டது