பக்கம்:நூறாசிரியம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

425

சுற்றச் சூழ்ந்தெம் மக்கள் துயர்க்கு முற்றத் தந்து மூச்சுஞ் செயலும் 10 ஒழுக்கத் துணர்த்து மன்னோ அடுக்கத் தலறுநின் அகல்வாய்க் குறிப்பே!

17

பொறிமயங்கி அறிவயர நெறிமறந்து நினைவகல விரிவானில் விழிசெலுத்தி அகல்நிலத்தே அடியூர்ந்து குதிகடலிற் குடைந்தெழுந்தே 5 எப்புடையும் எம்மருங்கும் முப்பொழுதும் நினைத்தேடி அலைந்தலைந்துங் காணாமே நிலைமடிந்து நெஞ்சொடிந்து அருந்துயிலின் அணைப்புண்டு 10 வருந்துகையில் எமைவந்தே பொருந்திப் புணர்ந்தஎம் ஐய மருந்துந் தந்தனை நீபயந்த மயற்கே!

18

மஞ்சள் மசித்துக் குங்கும மளவிச் சந்தனத் தேய்வின் பன்னீர் குழைத்துப் பூவுடல் பூசிப் புதுப்புன லாடிய தேமற் பொலிந்த தெரிவையே எனினும் ஒப்பிலா நெஞ்சின் உடலொடு முயக்கம் 5 உப்பிலா நரந்தம் போல எவ்வதும் புளிக்குமென் இயம்புதி யோயே!

திணை - குறிஞ்சி

துறை - தன்னை மணம் பேச வந்தான் தவிர்க்கத் தன் காதலை உள்ளடக்கித் தோழியிடம் தலைவி குறிப்புணர்த்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/451&oldid=1224435" இலிருந்து மீள்விக்கப்பட்டது