பக்கம்:நூறாசிரியம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

நூறாசிரியம்

தண்டோட் டழுவ லல்லதைக் கண்டோர் மயங்கல் காட்சியிற் கழன்றே!

திணை - குறிஞ்சி துறை-தலைமகனைத் தோழி ஐயுற்றுத் தலைவியைத் தெருட்டியது

21

முகில்தொடு தெங்கின் மூரலம் பாளை
உகிர்க்குறை யன்ன ஒள்வாட் சீவல்
தண்கட் சிதர்வொடு தளிர்தோள் தடவ
மொய்ம்புடற் சிலிர்க்குந் தொய்குழன் மடவீர்,

நெளிவிர லடுக்கு மிழிபடு கீற்றின்
5

ஒலியிணைந் துயிர்க்குங் களிதுள் மெல்லிசை
வலிவுறு நெஞ்சம் பின்ன நலிவுறு மிவரடி வினைகெடல் நினைமே!

தினை :குறிஞ்சி

22

முப்புடை முந்நீர் முழக்கிடைப் படுத்த
தெப்பத் தன்ன திகழ்ஞா லத்து மாந்தர் மாந்தர் என்மனார் மாந்தர்
முற்றிய உணர்வின் நெடும்பின் னெதிர்வை

ஒற்றி யுணர்வார் உறுவன சிறுகால்
5

முற்படத் தெளிவார், மூளுங் காலை
உட்பட நினைவார், உழன்றறி வமைவார்,
பல்காற் பட்டும் உள்கா ரிவரோ டொன்றும் ஒருமையும் உணராராகி

என்றும் பிறரோ டயங்குறு மாக்க்ளென்
10
டறுவகைத் தோரோ அதர்வகை நான்கே!

ஒன்றே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/454&oldid=1224411" இலிருந்து மீள்விக்கப்பட்டது