பக்கம்:நூறாசிரியம்.pdf/457

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிற்குறிப்புகள்

நூறாசிரியத்தின் மூலப் பாடல்கள் எழுதப்பெற்றிருந்த சுவடியில் இந்நூல் தொடர்பாகவும் பிறவாறும் எழுதி வைத்திருந்த குறிப்புகள் பல. அவை இங்கே தரப் பெறுகின்றன.

★ நூறாவது பாடலாக எழுதப்பெற்றிருந்த ஒன்றிறை என்னும் பாடலை முதற்பாடலாக எடுத்துக் கொண்டு 'உயிரின் மாட்டே' எனத் தொடங்கும் தொண்ணுற்றொன்பதாம் பாடலை யொட்டி

“நூறாவது பாட்டாகக் கொள்க!”

என்று குறிக்கப் பெற்றிருப்பதோடு

“ஆங்கவ னருள லிங்கிவ ணிற்றது”

என்னுங் குறிப்பும் காணப்பெறுகின்றது.

பிற குறிப்புகளாவன.

“உயிரின் மாட்டே உடலின் இயக்கம் -உயிரே
நீருண் கனலா நிகழ்விலாப் பதுவாய்,
உளமும் அறிவுப் உறுத்த வுறுவதுவே
உளமே அறிவே உவராய் நீராய்”

★ “கதிரவன் சூட்டை உடலுட் புகுத்துவதும் சுவற்றுவதும் செய்தல் போல்”

‘நெடுந்தொலைமே’ இப்பாடலையும் நூறாசிரியத்துட் சேர்க்க!

தெ.மொ.இயல்! பொங்கல் மலர்

★ “காமரா சென்னுங் கடமை மாமலை” - இப்பாடலையுஞ் சேர்க்க.

★ “எண்ணலொன்று நாவால்
 எடுத்துரைத்தல் மற்றொன்று
பண்ணலொன்று சாரும்
 பயனொன்று -மண்ணுலகின்
மாந்த வினத்தின்
 மதி நலத்தை என்னென்போம்
காந்து மனமறிமோ
 கண்?”

“பல உயிர்களின் ஓடம் இவன்!
உடல்களின் ஓடம் போலும்
உயிர்களின் ஓடம் இவன்!”