பக்கம்:நூறாசிரியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

நூறாசிரியம்


இக்கூற்றால் தன் தோழிக்குச் சொல்லுவது போல் அருகில் தான் உரைப்பது கேட்டு நிற்கும் தலைவனுக்கும் தன் உறுதிப்பாடு கூறினாள் என்றபடி

யாதிவர் வினை - மணவினை குறித்த எம் பெற்றோரின் செய்கை இத்தகைய சிறுமை வாய்ந்ததே என்றும்.

மணவிழா குறித்துத்தம் பெற்றோர்வினைபடத் தொடங்கிவிட்டனர்; இனி என் தலைவன் செய்யப் போவதொரு செயல்தான் என்ன? என்று தோழி முகமாகத் தலைவி தலைவனைக் கேட்டனள் என்றும் பொருள் கொள்க.

இப்பாட்டு குறிஞ்சி யென் திணையும், நொதுமலர் வரைவழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது என்ற துறையுமாம்.

இனி, 'நொதுமலர் வரைவுழித் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது' என்றும் கொளற்பாலதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/52&oldid=1189512" இலிருந்து மீள்விக்கப்பட்டது