பக்கம்:நூறாசிரியம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

27

7 என்றும் வாழுநர்


நாடு பலவாக; மொழி பலவாக!
ஆடமை கொடியின் அரசு பலவாக!
மாணும் ஒழுகினும் மக்கள் பலராக!
எத்திசை என்னோ ராயினு மத்திசைப்

புலனும் உளமும் பூண்டா ராகி,

5


நிலத்துயிர்க் கெல்லா மளியி னிரங்கிப்
புலத்துறுப் புய்க்குஞ் சான்றவ ருளரே!
வெம்மை மாக்களும் வினையழி வாரும்
மும்மையு முளரவர் உய்யல் வேண்டிப்

பன்னூல் துவன்று பாதை தெரித்தல்

10


மெய்ந்நூல் நின்ற மேலோர் பாடே!
ஊருணி மருங்கிற் பல்லதர் வகுத்து
நீருண வருஉம் வேட்கை யோர்க்கு
நின்றது தணிப்பதக் கடனே!
என்றும் வாழுந ரித்திகை வோரே!

பொழிப்பு:

இவ்வுலகத்து நாடுகள் பலவாகும்; ஆங்காங்கு வழங்கும் மொழிகளும் பலவாகும்; அவற்றை ஆளும், ஆடுகின்றதும், அமைகின்றது மான அறுவை இலச்சினையாகிய கொடிகள் சான்ற அரச அமைப்புகளும் பலவாகும். அவ்வமைப்புகளுக்கடங்கிப், பெருமை மிக்க நாகரிகத்தும் பலராவர். இவ்வழி, எவ்விடத்தாராயினும், எம்மக்கட் பிரிவினராயினும், அவ்வவ்வழி அறிவுணர்வும் உள்ளவுணர்வும் பூண்டவராகி, இவ்வுலகின்கண் கால்கோளும் எல்லாவகை உயிர்கட்கும் அருளால் இரங்கல் செய்து, அவ்வுயிர்கள் தாங்கிய புலன்களின் உறுப்பு விளக்கத்திற்கு அவற்றை வழிநடத்துதற்குச் சால்பு மிக்க தன்மையர் என்றும் உளராக. அவர் உளர் போலவே,அறிவானும் உளத்தானும் கொடுமை மிக்க மாந்தப் போலியரும் விலங்கு போலியரும், தாம் தாம் மேற்கொண்ட வினைகளான் அழிந்து படுவாரும் எக்காலத்தும் உளராவர்; அவ்வகையினார் தம் தம் நிலைகளினின்று உய்ந்து போதல் விரும்பி, அவர்செலும் விழி நிலைகளை முட்டறத் தெரிவிக்கும் பல்வகை நூல்களை நுவலுதல், மெய்யறிவாற்