பக்கம்:நூறாசிரியம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

நூறாசிரியம்


கூனித்தாழ்ந்த -வளைந்து தாழ்வுற்ற.

ஒதம் - வெள்ளம் வெள்ளக் கசிவு. 'ஒள்'லென் வேரடியாகப் பிறந்த சொல்.

ஒள் - வெண்மை ஒளி -ஒளிர்தல் (வெண்மை உள்ளது ஒளிர்தலும் ஒளியுடையது வெண்மையாயிருத்தலும் ஓர்க்க). ஒள் +து, ஒது-ஓது ஓதுதல்-ஓசையிடுதல்-ஆரவாரித்தல் ஓது-ஓதை ஆரவாரம்-ஓசை, ஓதை-ஓதம். தண்ணீர் ஒளிப்பெற்று விளங்குதலும் பெருத்த ஓசையுடன் செலவு மேற்கொள்ளுதலும் ஆதலின் அதற்கு ஓதம் என்ற ஒரு காரணப் பெயர் தோன்றிற்றென்க.

நீர்க்கசிவு பெற்றுத் தாழ்ந்த கூரைக்குடிலுள் தொடர்ந்து குளிரும் மண்டிய இருட்போதில், உடலைப்போர்த்துதற்காகாத ஒரு முழத் துணியை முன்னுக்கும் பின்னுக்கும் இழுத்திழுத்து மூடுதலால் ஏற்படும் துயரத்திற் கொப்பான எம்வாழ்க்கை எனப்பெற்றது.

கையகன்று ஏந்தி - கைகளை அகல விரித்தபடி ஏந்தி.

குறையக் கரையும்- குறையுங்காலை ஒலிப்பட ஆரவாரித்தல் செய்யும்.

புரை காய்வது -குறைநிலைகளைத் தம்முட் கனன்று காய்வது.

குய்ப்புகை - தாளிதப் புகை

தாழ் செறித்தல் - கதவைத் தாழிட்டு நெருங்க முடுக்குதல்.

இயல்பினது - என்றும் இயல்பான தன்மையுடையது.

அளியே - இரங்கத் தக்கது!

தம் மனையில் சமையல் செய்யுங்கால் எழும் இனிய தாளிதப் புகையும், அண்டை வீட்டினர் தம் வயின் செல்லுதல் கூடாதெனத் தடுக்க, தம் வீட்டுக் கதவினைத் தாழால் நெருங்க முடுக்கியடைக்கும் இரங்குதற்கரிய இயல்பான தன்மையை உடைய அயலார் என்றபடி

இரங்குதல் அவர் எளிய மனப்பண்பு குறித்து என்க.

ஆளுநர்க்குளம் கவலாது -தம்மை அரசியலால் ஆளுதல் பொறுப்புப் பெறுவார்தம் அறிவு, பண்பு, அறன், நடுவு நிலைமை, தறுகண், கொடை முதலியன பற்றிக் கவலுறாது எவரேனும் ஒருவர் ஆளுதலுக் கியைந்து நிற்பது.

உளங் கவலாத்தன்மை கல்வியறிவுக் குறைவானும்; அரசியல் அறிவுக் குறைவானும், பொதுமை யுணர்வின்மையானும் ஏற்படுவது.

சீர்மை நூறும் சிறுமை - செப்பமான உயர்ந்த தன்மைகளை அழித்துக் கொள்ளுதலாம் இழிந்த தன்மை.