பக்கம்:நூறாசிரியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

47


ஆயம் - விளையாடும் மகளிர் கூட்டம்.

பொய்யின் உண்டு - பொய்யாக உண்ணுதல் போலும் மெய்ப்பாடு காட்டி

பையல் மணந்து - சிறியோர் விளையாடுங்காலை, பெரியோர் மெய்யின் ஆற்றும் செயலேபோல், தாமும் பொய்யின் ஆடிக்காட்டி மகிழ்வது உலகியல்பாகவின், பெரியோர் தம்முள் மணந்து மகிழ்தல் போலும் தாமும் தம்முள் மணம் செய்வது போலும், மனம் செய்து கொண்ட கணவன் மனைவியர் உரையாடுதல் போலும், நடித்து மகிழ்வர் என்றபடி

செய்மனல் சிற்றில் - மணலால் செய்யப்பெற்ற சிற்றில்

வைகி- தங்கியிருந்து.

வாழ்தலை- வாழ்கின்ற பொழுது.

நிற்பால் உரைத்ததும் கேட்டதும்- யான் நின்பால் இல்லறம் புரியுங்காலத்து உரைத்தவற்றையும், உரைக்கக் கேட்டவற்றையும்.

நிகழ்த்த - நிகழ்த்திக்காட்ட

பெரியோர் உரையாட்டு சிறுவரைக் கவருமாகலின், அதுபோல் தாமும் தம் ஆயத்தாரிடைக் கணவன் மனைவியர்போல் உரையாடி மகிழ்வர் என்பதாம்.

தன் புதுக்கேள்வன் - புதிதாகத் தன்னை மணந்த உரிமையாளன் - கணவன்.

பின்னகம் - தலைமயிர்ப் பின்னல்.

தாழ்க்க - தாழும்படி இழுக்க

உரையாட்டால் சினமும் மகிழ்வும் தோன்றும் போலும் மெய்ப்பாடு காட்டி விளையாடுமிடத்து, சிறியோரும் பெரியோர் போலவே மனைவியர் மயிர்ப்பற்றி உலுக்குதல்; சிறியோர் முன்னர்ப் பெரியோர் இவ்வாறு நடப்பது, அவர்க்கு எத்துணைக் கவர்ச்சியான காட்சியாகப் பட்டு, அதுபோலும் அவர் நடத்திக் காட்டுதற்கு அவரை வழிப்படுத்திக் காட்டும் என்பதைப் பெரியோர் நினைக்க

நனி சினந்து - மிகவும் சினங்கொண்டு.

குஞ்சி- ஆடவர் தலைமயிர்.

நவித்தல் - வருந்தும்படி செய்தல்,

அவன்.அம்மே என - விளையாட்டாக அவன் தலைமயிரை அவள் பற்றியிழுத்து நலிக்க, அதனால் உண்மையிலேயே வருந்தினான் ஆகலின் அது தாளாது, அவன் தன் தாயை அம்மே என விளித்தான் என்றபடி

அவள் அடுத்து - அவன் தாய் இவர்களை நெருங்கி வந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/73&oldid=1181276" இலிருந்து மீள்விக்கப்பட்டது