பக்கம்:நூறாசிரியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

65



14 தேராவாழ்க்கை


விரைவா கின்றே உலகம்! உலகத்துப்
புரையா கின்றே பொலிவுறு வாழ்வே!
மண்ணா கின்றே மனனே! மாண்பொடு
பொன்னா கின்றே பொய்யுடைப் போக்கே!
வறிதா கின்றே அறிவே! வாணாட் 5
குறியதர் தப்பின்று குடும்பெனும் பயனே!
முதியோர் முதுமை முகிழ்விறந் தன்றே!
இளையோர் இளமை எழில்குலைந் தன்றே!
பெண்டிர் பெண்மை பெட்பிறந் தன்றே!
ஆடவர் ஆண்மை அறக்குலைந் தன்றே! 10
அறங்கூ னின்று பொருளர சாணையின்
மறந்தலை நிமிர்ந்தன்று, மானிழிந் தன்றே!
மணஞ்செய் கோலத்து மாண்பிழந் தன்றே!
கணவர் மனைவியர் கட்டவிழ்ந் தன்றே!
அறிவியல் உடலிய லடியிழிந் தன்றே! 15
பொறியியல் மக்களின் பொறியரிந் தன்றே!
கான்படு விலங்கின் முனைவே!
மாண்பெறு மாந்தர்க்கு முயல்வா கின்றெனத்
தேரா வாழ்க்கை திறம்பலின்
ஆரா விருள்சேர் அழிநிலை நோக்கியே! 20


பொழிப்பு:

சுழற்சி நிரம்பிய இம் மண்ணகத்துப் பொலிவு நிரம்பியிருந்த வாழ்வு உள்ளிடு குன்றித்திண்மை குன்றுவதாயிற்று நிலைத்திருக்க வேண்டுவதாகிய உள்ளம் மண் போலும் குலைவுறலானது , பொக்கென வெறுமை நிரம்பிய பொய்ம்மைப் போக்கே பெருமை பெறுவதாகிப் பொன் போலும் மதிக்கத் தக்கதானது அறிவு பயனற்றுப் போதலால் வறட்சியுற்றது. வாழ்நாளின், இலக்கை எய்தும் வழி தப்பியது, கூடி வாழும் பெரும் பயன்! முதுமை நிரம்பியவரின் மூப்பு அறிவு மலர்ச்சியற்றதாய்ப் போனது; இளையோரின் இளமை அழகு குலைவதாயிற்று; பெண்டிரின் பெண்மை வேட்கத் தக்க நிலையினின்று அழிந்தது; ஆடவரின் ஆளுமை நிலை முற்றும் குலைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/91&oldid=1181788" இலிருந்து மீள்விக்கப்பட்டது